/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : பயங்கரவாதத்துக்கு எதிர்ப்பு
/
தகவல் சுரங்கம் : பயங்கரவாதத்துக்கு எதிர்ப்பு
PUBLISHED ON : ஆக 21, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
பயங்கரவாதத்துக்கு எதிர்ப்பு
உள்நாடு, சர்வதேசம் என பயங்கரவாதம் எங்கு, எந்த வடிவில் வந்தாலும் ஆபத்தானது. பயங்கரவாதத்தால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகின்றனர். இவர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக ஐ.நா., சார்பில் ஆக. 21ல் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் வெறுப்புணர்வை மறந்து, சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் எனஇத்தினம் வலியுறுத்துகிறது.