/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : சுகாதாரமான பணியிடம்
/
தகவல் சுரங்கம் : சுகாதாரமான பணியிடம்
PUBLISHED ON : ஏப் 28, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
சுகாதாரமான பணியிடம்
விவசாயம், கட்டடம், துப்புரவு, சாலை, மின்சாரம், குடிநீர் வாரியம், சுரங்கம், அலுவலகம் உட்பட பல துறைகளிலும் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவ்வாறு பணியிடங்களில் அவர்களது சுகாதாரம், பாதுகாப்பை வலியுறுத்தி உலக தொழிலாளர் அமைப்பு ஏப். 28ம் தேதியை உலக பணியிட சுகாதாரம், பாதுகாப்பு தினமாக அறிவித்தது. பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு ஏற்படும் விபத்து, நோய்களை தடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம். 'ஆரோக்கியம், பாதுகாப்பில் புரட்சியை ஏற்படுத்துதல்; ஏ.ஐ., டிஜிட்டல் துறையின் பங்கு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.