PUBLISHED ON : ஆக 06, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
ஹிரோஷிமா தினம்
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் மீது 1945 ஆக., 6ல், அமெரிக்கா அணுகுண்டு வீசியதன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 'லிட்டில்பாய்' எனும் 60 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து வந்த 'போயிங் பி-29 சூப்பர்போர்ட்ரெஸ்' என்ற அமெரிக்க போர் விமானம், ஹிரோஷிமா மீது உலகின் முதல் அணுகுண்டை வீசியது. 1.5 சதுர கி.மீ., சுற்றளவுக்கு அழிவை ஏற்படுத்தியது. இதில் 1.40 லட்சம் பேர் பலியாகினர். கதிர்வீச்சால் ஆயிரக்கணக்கானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். ஆக., 9ல் நாகசாகி நகரம் மீது அடுத்த அணுகுண்டை வீசியது.