PUBLISHED ON : பிப் 14, 2026 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காதலர் தினம் இன்று (பிப். 14) கொண்டாடப்படுகிறது. இது உருவான கதை சுவாரஸ்யமானது. 14ம் நுாற்றாண்டில் ரோம் அரசர் 2ம் கிளாடியஸ், இளைஞர்களை ராணுவத்தில் சேர அழைத்தார். இதற்கு வரவேற்பு இல்லாததால் காதல், திருமணத்திற்கு தடை விதித்தார்.
இதை மீறி பாதிரியார் வேலன்டைன், காதலிக்கும் இளைஞர்களுக்கு ரகசிய திருமணம் செய்து வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த அரசன் அவருக்கு மரண தண்டனை விதித்தார். அவரது நினைவுநாளையே 'வேலன்டைன் தினமாக' கொண்டாட தொடங்கினர். 20ம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் வேலன்டைன் தினம் 'காதலர் தினமாக' மாறியது

