PUBLISHED ON : டிச 21, 2025 11:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனதை ஒருமுகப்படுத்துவது தியானம். ஆயிரக்கணக்கான ஆண்டாக வழக்கத்தில் உள்ளது. உலகில் 20 - 50 கோடி பேர் தியான பயிற்சி செய்கின்றனர். தியானம் செய்வதால் மன அழுத்தம், ரத்த அழுத்தம், துாக்கமின்மை உள்ளிட்ட பாதிப்பை தடுக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் பலனை உலக மக்கள் அனைவரும் பெற வேண்டும்.
இதற்காக டிச.,21ஐ தியான தினமாக அனுசரிக்க வேண்டும் என இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் ஐ.நா., வில் தீர்மானம் கொண்டு வந்தன. இதை ஏற்று கடந்தாண்டு முதல் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

