/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : உலக புகையிலை எதிர்ப்பு தினம்
/
தகவல் சுரங்கம் : உலக புகையிலை எதிர்ப்பு தினம்
PUBLISHED ON : மே 31, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
உலக புகையிலை எதிர்ப்பு தினம்
உலகில் 13 - 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 3.7 கோடி பேர் புகையிலை பயன்படுத்துகின்றனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. புகையிலையின் தீமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அதன் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி மே 31ல் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. புகையிலையால் ஆண்டுக்கு 80 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். சிகரெட் தயாரிப்பதற்காக 60 கோடி மரங்கள் வெட்டப் படுகின்றன. புகை பிடிப்பதால் அவர் மட்டுமல்ல அவரது குடும்பமும் பாதிக்கப்படுகிறது. புகைப்பவருக்கு அருகில் நிற்பவருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.