PUBLISHED ON : ஜூலை 01, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிய டாக்டர்கள் தினம்
உயிர்களை காப்பாற்றும் டாக்டர்களின் பணி உன்னதமானது. இவர்களது சேவையை போற்றும் வகையிலும், மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மருத்துவருமான பி.சி.ராய் பிறந்த தினமான ஜூலை 1, தேசிய டாக்டர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இவர் பிறந்ததும், மறைந்ததும் ஜூலை 1ல் தான். மருத்துவம், அரசியல், நிர்வாகம், கல்வி என தான் பங்கெடுத்த துறைகளில் முன்மாதிரியாக திகழ்ந்தார். 'சுதந்திரம் எனும் கனவு நிறைவேற இந்தியர்களுக்கு வலிமையான உடலும், மனமும் தேவை' என்றார். ஏழைகளுக்காக, பல மருத்துவமனைகளை தொடங்கினார்.