sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மே 04, 2026 ,சித்திரை 21, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

அறிவியல் மலர்

/

ஆண் மயிலின் தோகை விரிப்பு ரகசியம்!

/

ஆண் மயிலின் தோகை விரிப்பு ரகசியம்!

ஆண் மயிலின் தோகை விரிப்பு ரகசியம்!

ஆண் மயிலின் தோகை விரிப்பு ரகசியம்!


PUBLISHED ON : ஆக 04, 2016 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 04, 2016 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண் மயில் தோகை விரித்து ஆடுவது, பெண் மயிலை கவர்வதற்குத்தான் என்பது தெரிந்த விஷயம். ஆனால், பெண் மயில்கள் அருகே இல்லாத போதும் தோகையை விரித்து சோம்பல் முறிப்பதுண்டு. எனவே, இனக் கவர்ச்சி நோக்கத்தோடு ஆண் மயில் தோகையை விரிப்பதில் கூடுதல் சமிக்ஞைகள் இருப்பதாக சொல்கின்றனர் இயற்பியலாளரான சூசன் அமாடோர் கானே. அமெரிக்காவின் பென்சில்வேனியாவிலுள்ள ஹாவெர்போர்ட் கல்லுாரியைச் சேர்ந்த இவர், விலங்குகளின் சமிக்ஞை முறையை ஆராய்பவர்.

இதனால், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் உயிரியல் ஆராய்ச்சியாளரான ரோசலின் டாகின் என்பவர் மயில்களைப் பற்றி ஆராய்வதற்கு எடுத்த அதிவேக வீடியோ காட்சிகளை பார்த்த சூசன் வியப்பில் ஆழ்ந்தார். ஆண் மயில், பெண் மயிலை கவர்வதற்காக தோகையை விரிக்கும்போது, தோகையின் இறகுகளில் உள்ள கண்கள் போன்ற அழகிய வடிவமைப்பு அப்படியே நிலைத்திருக்க, தோகை மற்றும் பின் வால் பகுதிகள் சடசடவென்று அதிர்ந்து, படபடக்கும் ஓசையை ஏற்படுத்துகின்றன. தோகை பெரிதாக உள்ள ஆண் மயில், இன்னும் கூடுதல் வேகம் மற்றும் ஓசையுடன் தோகையை

படபடக்கிறது. எனவே, தோகையில் உள்ள கண்கள் போன்ற வடிவமைப்பின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, படபடக்கும் வேகம் அதிகமாக இருப்பது, ஓசை அதிகமாக இருப்பது ஆகியவற்றைப் பொறுத்து பெண் மயில்கள் சொக்கிப் போய் இனப்பெருக்கத்திற்கு சம்மதிக்கின்றன என்று சூசனும், ரோசலினும் முடிவுக்கு வந்திருக்கின்றனர்.இவர்களது ஆய்வு, சமீபத்திய, 'ப்ளோஸ் ஒன்' இதழில் பதிப்பிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us