sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

அறிவியல் மலர்

/

துணியிலிருந்து காகிதமா?

/

துணியிலிருந்து காகிதமா?

துணியிலிருந்து காகிதமா?

துணியிலிருந்து காகிதமா?


PUBLISHED ON : மார் 13, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மார் 13, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்று காகிதம். காகித உற்பத்திக்காக மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுகின்றன. இதற்கு மாற்றாகக் கரும்புச் சக்கை உள்ளிட்ட கழிவுப் பொருட்களிலிருந்து காகிதம் தயாரிக்கும் முறை பரவலாகி வருகிறது.

மற்றொரு பக்கம் பயன்படுத்தப்பட்ட உடைகள் மறுசுழற்சி செய்யப்படாமல் பெரும்பாலும் நிலத்தில் புதைக்கப்படுகின்றன அல்லது எரிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இப்படி வீணாக்கப்படுகின்ற துணிகளில் இருந்து பேப்பர் தயாரிக்கும் முறையை ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த கிரேஸ் தொழில்நுட்ப பல்கலை கண்டறிந்துள்ளது.

முதலில், பருத்தித் துணிகள் சிறு துண்டுகளாக வெட்டப்படுகின்றன. பிறகு சில வேதிப்பொருட்கள் இவற்றுடன் கலக்கப்படுகின்றன. இதனால் துணியிலிருந்து பருத்தி இழைகள் தனியாகப் பிரிகின்றன. பிரியும் பருத்தி இழைகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து முடிச்சு விழுந்து விடாதபடி தனியாகச் சேகரிக்கப்படுகின்றன.

இவ்வாறு தனித்தனியாகப் பிரிக்கப்பட்டதும் இவற்றை நேரடியாகக் காகித உற்பத்திக்குப் பயன்படுத்த முடியும். இந்த காகிதங்கள் எழுதுவதற்குப் பயன்படுபவை அல்ல. மாறாகப் பொட்டலம் கட்டுவதற்கு (பேக்கேஜிங்) பயனுள்ளவையாக இருக்கும்.

இந்த வகையான காகிதங்கள் நல்ல அடர்த்தியானவை, எளிதில் கிழியாது. எனவே, பேக்கேஜிங்கில் உபயோகமாகும் அட்டைப் பெட்டிகள் செய்யவும் பயன்படுத்த முடியும். இந்த செயல்முறை வருங்காலத்தில் இன்னும் மேம்படுத்தப்படும். அப்போது வீணாகக் கொட்டப்படும் துணிக்கழிவுகள் முழுவதும் காகிதங்களாக மாற்றப்படும்.

துணிகளில் உள்ள இழைகள் ஒட்டாமல் கிடைப்பதற்கு சில நொதிகள் உதவும். அவற்றைக் கண்டறியும் ஆராய்ச்சியில் ஆய்வாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us