sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

அறிவியல் மலர்

/

அறிவியல் துளிகள்

/

அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்


PUBLISHED ON : ஜூன் 27, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூன் 27, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

01. தகவல்களைச் சேமிக்க மிகச்சிறந்த சாதனமாக இருப்பவை மரபணுக்கள் தான். உலகில் உள்ள மொத்த தகவல்களையும் தேநீர் கோப்பை அளவுள்ள மரபணுத் தொகுதியில் சேமித்து விடலாம். ஆனால், இவை எளிதில் சிதைந்துவிடும். இதைத் தடுக்க செயற்கை அம்பர் (Amber) கல்லைப் பயன்படுத்த முடியும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த மாசசூசெட்ஸ் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Image 1286373


02. வருங்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் பல நாடுகளுக்கு உள்ளது. அவ்வாறு அனுப்பும்போது அங்குள்ள குறைந்த ஈர்ப்பு விசையால் சிறுநீரகம் பாதிக்கப்படும். இதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்த ஆய்வுகளை இங்கிலாந்தைச் சேர்ந்த யு.சி.எல். பல்கலை மேற்கொண்டு வருகிறது.

Image 1286374


03. விலங்கு தோல்களில் இருந்து தயாரிக்கப்படும் லெதர் பொருட்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. இதனால் தாவரங்களில் இருந்து தோல் பொருட்கள் தயாரிக்கும் முறை பிரபலமாகி வருகிறது. அந்த வகையில், தற்போது தாய்லாந்து விஞ்ஞானிகள் அன்னாசி தாவர இலைகளிலிருந்து லெதர் தயாரித்துள்ளனர். இது மற்ற தாவர லெதர்களை விட 60 மடங்கு வலிமையாக உள்ளது.

Image 1286375


04. புவியில் மிக உயரமான எரிமலைகளின் உச்சி, பனியால் மூடப்பட்டிருக்கும். அதேபோல் பனியால் மூடப்பட்டுள்ள எரிமலையை செவ்வாய் கிரகத்தில் விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பனி, துருவத்தில் இருந்தால் பரவாயில்லை, செவ்வாயின் மத்திய பகுதியில் நேரடி சூரிய வெப்பம் படும் இடத்தில் இருப்பது தான் ஆச்சரியம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

Image 1286376


05. அமெரிக்காவில் உள்ள கொலராடோ பல்கலை மேற்கொண்ட ஆய்வில், யானைகள் தங்கள் நண்பர்களை அழைக்கப் பல்வேறு விதமான ஒலிகளை எழுப்புகின்றன என்று தெரியவந்துள்ளது. இது மனிதர்கள் ஒருவரை ஒருவர் பெயர் சொல்லி அழைப்பது போன்றது என்கின்றனர் விஞ்ஞானிகள்.






      Dinamalar
      Follow us