sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

அறிவியல் மலர்

/

அறிவியல் துளிகள்

/

அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்


PUBLISHED ON : ஆக 29, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 29, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

01. புகை பிடித்தல், மன அழுத்தம், உடல் பருமன் ஆகியவை தான் இதய நோய்களுக்கான காரணிகளாக அறியப்பட்டு வந்தன. தற்போது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மொனாஷ் பல்கலை 23,814 பேரை வைத்து மேற்கொண்ட ஆய்வில், யாருக்கெல்லாம் மலச்சிக்கல் உள்ளதோ அவர்களுக்கெல்லாம் இதயநோய் ஏற்படும் சாத்தியம் அதிகமுள்ளதாகக் கண்டறிந்துள்ளது.

Image 1314182


02. வலி நிவாரணத்திற்காக எடுத்துக் கொள்ளப்படுபவை ஓபியாய்டு மருந்துகள். இவற்றை அளவு தெரியாமல் அதிகமாக எடுத்துக் கொண்டால் மரணம் கூட நேரலாம். இதனால், இவற்றை செயலிழக்கச் செய்யும் நாலோக்சோன் மருந்தை தானாகவே ரத்தத்தில் கலக்கும் கருவியை மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகம் வடிவமைத்துள்ளது. இதை உடலுக்குள் பொருத்தினால் போதும்.

Image 1314183


03. பொதுவாக உலோகங்களை உருவாக்க உயர் வெப்பநிலை தேவை. ஆனால், தற்போது சிங்கப்பூர் பல்கலை, சில பூச்சிகளின் மேற்புறத்தில் உள்ள சிடோசான் எனும் ஒருவித சர்க்கரையைப் பயன்படுத்தி, சாதாரண அறை வெப்பநிலையிலேயே உலோகங்களை உருவாக்க முடியும் எனக் கண்டறிந்துள்ளது.

Image 1314184


04. பயனற்ற ஏவுகணை பாகங்கள், செயலிழந்த செயற்கைக்கோள் என விண்வெளியில் 8,000 டன் குப்பை கழிவுகளாக உள்ளன. வேகமாகச் சுழலும் இவை பூமிக்கும், பூமியிலிருந்து அனுப்பும் விண்கலன்களுக்கும் ஆபத்தாக முடியும். அதனால், இவற்றை அகற்ற விண்வெளி விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

Image 1314185


05. நம் சூரிய மண்டலத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட பல கோள்களின் கருவத்தில் தண்ணீர் இருக்கலாம் என்று சுவிட்சர்லாந்தின் சூரிச் பல்கலை விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இவற்றின் கருவம் இரும்பாலானவை. இரும்பால் மிக அதிகமான நீரை உறிஞ்சி வைத்துக் கொள்ள முடியும்.






      Dinamalar
      Follow us