sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

அறிவியல் மலர்

/

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

/

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்


PUBLISHED ON : ஏப் 11, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 11, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவி வெப்பமயமாதலுக்குக் காரணமாக இருப்பவை பசுமை இல்ல வாயுக்கள். அவற்றில் முக்கியமானது கரியமில வாயு. சுற்றுச்சூழலில் உள்ள, அளவுக்கு அதிகமான கரியமில வாயுவை நீக்கச் சில செயற்கை முறைகள் உள்ளன என்றாலும், இயற்கையாகவே சில வழிகளில் வாயு நீக்கப்படுகிறது. குறிப்பிட்ட அளவு கரியமில வாயுவை மரங்களும், கடலும் உறிஞ்சிக் கொள்கின்றன.

இதைத் தவிர சாதாரணமாகவே பாறைகள், கற்கள் சிதையும்போது அவை கரியமில வாயுவை உறிஞ்சிக் கொள்கின்றன. இந்த இயற்கை நிகழ்வை மனிதர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறது சமீபத்திய ஆய்வு. சிதைந்த கற்களை விவசாய நிலங்களில் துாவுவதால், பசுமை இல்லா வாயுக்கள் உறிஞ்சிக் கொள்ளப்படுவதுடன் பயிர்களின் விளைச்சலும் அதிகரிப்பதாக ஷெஃபீல்ட் லெவர்ஹுல்ம் பல்கலை கண்டறிந்துள்ளது.

பொதுவாகவே கற்களின் மேற்பரப்பு தான் கரியமில வாயுவை உறிஞ்சிக் கொள்கிறது. அதனால், ஒரு பெரிய கல் பல சிறு துண்டுகளாகும்போது பரப்பளவு அதிகரிக்கிறது, அதிகமான வாயுவை பெற்றுக்கொள்ளவும் செய்கிறது.

2020ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே செயற்கையாகக் கற்களை உடைத்துப் போடுவதன் மூலம், ஒவ்வோர் ஆண்டும் சுற்றுச்சூழலில் உள்ள 200 கோடி டன் கரியமில வாயுவை நீக்க முடியும் என்று கண்டறியப்பட்டுவிட்டது. இது சராசரியாக ஒவ்வோர் ஆண்டும் போக்குவரத்து மூலம் உற்பத்தி ஆகும் கரியமில வாயுவின் அளவை விட அதிகம்.

சரி, இவ்வாறு உடைத்துப் போடுவதை வேறு எங்காவது செய்யலாமே, வயலில் ஏன் செய்ய வேண்டும்? சிதைந்த கற்களில் பயிர்களுக்குத் தேவையான பல நுண்ணுாட்டச் சத்துகள் உள்ளன. இவை தான் பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கின்றன. இதற்கு ஆதாரப்பூர்வமான சான்று வேண்டும் என்பதற்காகத் தான் விஞ்ஞானிகள் கள ஆய்வு செய்தனர்.

சோளமும், சோயாவும் பயிர் சுழற்சி முறையில் பயிரிடப்படும் விவசாய நிலத்தைத் தேர்ந்தெடுத்தனர். எரிமலைப் பாறைகளிலிருந்து உருவாகும் 'பசால்ட்' கற்துகள்களை ஒரு ஹெக்டேருக்கு 50 டன் என்ற அளவில் நிலத்தில் சேர்த்தனர். ஆண்டின் இறுதியில் நிலத்தின் மொத்த விளைச்சல் 16 சதவீதம் அதிகரித்தது. 'பசால்டி'ல் பாஸ்பரஸ், பொட்டாசியம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருந்ததே இந்த அமோக விளைச்சலுக்குக் காரணம்.

இங்கு விளைந்த பயிர்களும் ஊட்டச்சத்து மிகுந்து இருப்பதால், இவற்றை உண்ணும் மனிதர்கள், கால்நடைகளும் ஆற்றல் பெறுவர். ஒரு ஹெக்டேருக்கு பரப்பப்பட்ட 'பசால்ட்' துகள்கள் ஓராண்டிற்கு 4 டன் கரியமில வாயுவை உறிஞ்சிக் கொள்வதும் கண்டறியப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த முறை பின்பற்றப்பட்டால் ஒரே நேரத்தில் பயிர் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, புவி வெப்பமயமாதலையும் தடுக்கலாம்.






      Dinamalar
      Follow us