sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

அறிவியல் மலர்

/

ஏலியன்களால் அனுப்பப்பட்டதா வால் நட்சத்திரம்?

/

ஏலியன்களால் அனுப்பப்பட்டதா வால் நட்சத்திரம்?

ஏலியன்களால் அனுப்பப்பட்டதா வால் நட்சத்திரம்?

ஏலியன்களால் அனுப்பப்பட்டதா வால் நட்சத்திரம்?


PUBLISHED ON : ஜூலை 24, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 24, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சமீபத்தில் சூரிய மண்டலத்தில் ஒரு சிறிய வால் நட்சத்திரம் நுழைந்தது. நாசாவின் அட்லஸ் தொலைநோக்கி இதை முதன்முதலில் கண்டு பிடித்தது. இதற்கு 3I/ATLAS என்று பெயரிடப்பட்டது.

சூரிய மண்டலத்திற்கு வெளியே இருந்து வருகிற இது போன்ற விண்வெளிப் பொருட்களுக்கு, 'இன்டர்ஸ்டெல்லார் ஆப்ஜெக்ட்' என்று பெயர்.

இந்த வால் நட்சத்திரம் அட்லஸ் 20 கிலோ மீட்டர் நீளமானது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இன்டர்ஸ்டெல்லார் பொருட்களிலேயே இது மிகப்பெரியது. இதை ஆராய்ந்த விஞ்ஞானிகள், இதில் சில மேகங்கள் இருப்பதை உறுதி செய்தனர்.

இதனுடைய மையம் பனிக்கட்டிகளால் ஆனது என்றும் தெரிவித்தனர். டிசம்பர் மாதத்தில் பூமியில் இருந்து 27 கோடி கிலோமீட்டர் துாரத்தில் இருக்கும். ஆனால், இதனால் எந்த பாதிப்பும் இல்லை. இது, சாதாரண வால் நட்சத்திரம் தான் என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆனால், அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலையைச் சேர்ந்த அவிலோப் என்கிற ஒரு விஞ்ஞானி, 'இந்த அட்லஸ் முதலில் வால் நட்சத்திரமா அல்லது விண்கல்லா என்பதை கண்டறிய வேண்டும். இது, திட்டமிட்டு சூரிய மண்டலத்துக்கு ஏலியன்களால் அனுப்பப்பட்டுள்ளது' என்றார்.

'டார்க் பாரஸ்ட் ஹை பாதீசிஸ்' என்று ஒரு கருதுகோள் உண்டு. அதன்படி இந்த பிரபஞ்சத்தில் பிற நட்சத்திர மண்டலங்களில், எண்ணற்ற நாகரிகங்கள் மனிதர்களை போல வாழ்கின்றன. ஆனால், தங்களுடைய இருப்பு பிறருக்கு தெரியவந்தால் தங்களுக்கு ஆபத்து நிகழ்ந்துவிடும் என்பதால், அவை தங்களை மறைத்துக் கொண்டு வாழ்கின்றன.

இந்த அட்லஸ் வால் நட்சத்திரத்தை ஆராய்ந்து, அது ஏலியன்களால் அனுப்பப்பட்டது என்பது உறுதியானால், இந்த கருதுகோள் உண்மையாகும் என்று அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us