sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

தீபாவளி மலர்

/

அறிவோம் தீபாவளியை

/

அறிவோம் தீபாவளியை

அறிவோம் தீபாவளியை

அறிவோம் தீபாவளியை


PUBLISHED ON : அக் 31, 2024

Google News

PUBLISHED ON : அக் 31, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் கொண்டாடப்படுவது தீபாவளி.

* வடமாநிலங்களில் சோடா தீபாவளி, படா தீபாவளி, கோவர்த்தன பூஜை என மூன்று நாட்கள் கொண்டாடுவர்.

* தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பாவம் விலகி புண்ணியம் சேரும். இந்நாளில் எண்ணெய்க் குளியல் செய்பவருக்குக் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.

* தீபாவளி நாளில் செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியைப் பூஜித்து புதுக்கணக்கு தொடங்கும் வழக்கம் முன்பு இருந்தது.

* தீபாவளியன்று அதிகாலையில் பூஜையறையில் கோலமிட்டு வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், பூக்கள், புத்தாடைகள், பட்டாசுகள், பலகாரங்களை விளக்கின் முன் வைத்து வழிபாடு செய்வர்.

* துக்களைப் போல ஜைனர், பவுத்தர், சீக்கிய மதத்தினருக்கும் தீபாவளி கொண்டாட்டம் உண்டு.

* வளியை 'பண்டிகைகளின் ராஜா' என்றும் பகவத் கீதையை 'தீபாவளியின் தம்பி' என்றும் காஞ்சி மஹாபெரியவர் குறிப்பிடுகிறார்.

* தீபாவளியன்று, 'என்ன கங்கா ஸ்நானம் ஆச்சா?' என ஒருவருக்கொருவர் கேட்கும் வழக்கம் உண்டு.

* நல்லெண்ணெய்யில் மகாலட்சுமியும், வெந்நீரில் கங்கையும் இந்நாளில் தங்கியிருப்பதை 'தைலே லட்சுமி: ஜலே கங்கே' என்கிறது துலாபுராணம்.

* ஆணவம் என்னும் இருளின் அடையாளம் நரகாசுரன். அந்த இருளைப் போக்க ஞானம் என்னும் தீபங்களை வீட்டில் ஏற்றுகிறோம்.

* முதன்முதலில் தீபாவளியை கொண்டாடியவர் நரகாசுரனின் மகன் பகதத்தன்.

* தீபாவளியன்று அரியணையில் அமர்ந்து பட்டம் சூடிக் கொண்ட மன்னர் சந்திரகுப்த விக்ரமாதித்தன்.

* தீபாவளியன்று வரும் அமாவாசையில் பிதுர் தர்ப்பணம் செய்வது சிறப்பு.

* தீபாவளியன்று இரவில் தீபமேற்றி பெண்கள் ஆற்றில் மிதக்க விடுவர். அவை நீரில் மூழ்காமலும், நீண்ட நேரம் அணையாமலும் இருந்தால் ஆண்டு முழுவதும் வளமாக அமையும்.






      Dinamalar
      Follow us