sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

ஒற்றை கிணற்று தண்ணீரெடுத்து ஒரு ஒற்றுமை பொங்கல்!

/

ஒற்றை கிணற்று தண்ணீரெடுத்து ஒரு ஒற்றுமை பொங்கல்!

ஒற்றை கிணற்று தண்ணீரெடுத்து ஒரு ஒற்றுமை பொங்கல்!

ஒற்றை கிணற்று தண்ணீரெடுத்து ஒரு ஒற்றுமை பொங்கல்!


PUBLISHED ON : ஜன 14, 2022

Google News

PUBLISHED ON : ஜன 14, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழர்களின் பாரம்பரியம், மண்சார்ந்த பண்பாடுகளை பொக்கிஷமாய் காத்து வந்த கிராமங்கள் பெரும்பாலும் அதன் அடையாளத்தை இழந்து வரும் நேரத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பண்பாடுகளை பறைசாற்றும் கிராமங்கள் இன்றும் இருக்கின்றன என்பதை நமக்கு உணர்வுபூர்வமாக உணர்த்துகிறது பொங்கல். அதுபோன்ற ஒரு கிராமம் தான் சிவகங்கை அருகே உள்ள நிரஞ்சான்.

இங்கு ஒற்றை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து ஊர் முழுக்க பொங்கலிடுகின்றனர். உறவு பாராட்டுவதும், விவசாயம் செழித்து, ஆடு, மாடு, மக்கள் நலன் காப்பதற்காக அம்மன் ஸ்ரீதேவியை அழைப்பதும் தான் இக்கிராம பொங்கலின் ஐதீகம். எந்த ஊரில் இருந்தாலும் உற்சாகத்துடன் உறவுகள் கூடும் களமாக கிராமமே களைகட்டிவிடும் என்கிறார் விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவரான காளைராஜன்.

ஜீவா கண்ணன் கூறுகையில் 'மாட்டுப் பொங்கல் இக்கிராமத்தின் ஸ்பெஷல். காலையில் குளித்து விட்டு ஈரத்துணியுடன் நல்ல நேரம் பார்த்து இங்குள்ள காமாட்சி அம்மனை பெண்கள் மட்டும் வணங்கி அங்குள்ள கிணற்றில் ஒன்று கூடி குடங்களில் தீர்த்த நீர் எடுப்பர். வீட்டு வாசலில் கல் அடுப்பில் (மூன்று கற்கள் குவித்து) பொங்கலிடுவர்.

விறகோ, காஸ் ஸ்டவ்வோ இல்லாமல் காய்ந்த பனை ஓலையில் எரித்து மட்டுமே பொங்கல் வைப்பர். பொங்கல் பொங்கிய செய்தியறிந்து ஊர் நன்மைக்காக ஆண்கள் அங்குள்ள கண்மாயில் குளித்துவிட்டு செம்புகளில் தீர்த்த நீருடன் வயல்களில் இறங்கி ஒற்றைப் படையில் நெல்மணிகள் கதிருடன் பறித்து செம்புக்குள் வைத்து திருஷ்டி கழிக்கும் நிகழ்ச்சி நடக்கும்.

இதன் பின் செம்பு நீரை வீடு, மாடு, ஆடுகளுக்கு தெளித்து, நெற்கதிர்களை வைக்கோலுக்குள் மடித்து ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் தொங்க விடுவர். அது அடுத்த பொங்கல் வரை இருக்கும் ' என்றார்.

ஐஸ்வரியா கூறுகையில் 'ஒரே கிணற்றில் தண்ணீர் எடுத்து ஊர் மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்து குலவையிட்டு அம்மனை வணங்குவது எல்லாம் கிராமம் செழிக்க தான்' என்றார்.

செந்தமிழ் கூறுகையில், 'இளைஞர்கள் வீரத்தை பறைசாற்றும் கண்மாய்க்குள் நீச்சல் போட்டியை காண கிராம மக்கள் வருவர். இளைஞர்கள் வெல்ல உற்சாகப்படுத்துவோம்' என்றார்.

பொங்கலில் முக்கிய நிகழ்வான கிராமத்திற்கே திருஷ்டி கழிக்கும் நிகழ்ச்சி நடக்கும். திருஷ்டி கழிக்கும் சமயமுத்து கூறுகையில் 'இதை பரம்பரையாக எங்கள் குடும்பம் செய்து வருகிறது. அப்போது 'பட்டி பல்க பல்க... பால் பானை பொங்க...பொங்க... ஸ்ரீதேவி நின்று அடங்க... மூதேவி முறிஞ்சு ஓட.. என ஓதும் வார்த்தைகளை கேட்டு இளைஞர்கள் ஒன்று கூடிவிடுவர்' என்றார்.

இன்னும் நுாறாண்டுகளுக்கு பின்னரும் இக்கிராமத்தில் விவசாயம் செழிக்கவும், ஒற்றுமை ஓங்கவும் பொங்கல் பொங்க நாமும் வாழ்த்துவோம்.

கே.காளீஸ்வரன்

எஸ்.மாதவன்






      Dinamalar
      Follow us