sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

குழந்தைகளின் குப்பி பொங்கல்

/

குழந்தைகளின் குப்பி பொங்கல்

குழந்தைகளின் குப்பி பொங்கல்

குழந்தைகளின் குப்பி பொங்கல்


PUBLISHED ON : ஜன 14, 2018

Google News

PUBLISHED ON : ஜன 14, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் அருகே காவனுாரில் குழந்தைகளை தெய்வங்களாக நினைத்து, பொங்கலிட்டு குப்பி பொங்கல் கொண்டாடுகின்றனர் கிராம மக்கள்.

இங்குள்ள சைவ வேளாளர் சமுதாயத்தினர் திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை பூர்வீகமாக கொண்டவர்கள். நுாற்றாண்டுகளுக்கு முன்பு முன்னோர்கள் இடம் பெயர்ந்து இங்கு குடியிருந்து வருகின்றனர். மாட்டுப்பொங்கல் தினத்தில் வீடுகளின் முன் மாட்டு சாணத்தில் பூசணி பூவை வைத்து அலங்கரிக்கின்றனர். அப்போது மந்திரிக்கப்பட்ட தண்ணீரை தெளித்து கோமாதாவை அலங்கரிப்பர். அதன் பின் காணும் பொங்கல் தினத்தில் சாணத்தில் பூசணிப்பூ வைத்து, கரும்பு, பொங்கல் ஆகியவற்றை படைக்கின்றனர்.

பத்து வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள், 3 வயதிற்குட்பட்ட ஆண் குழந்தைககளை சிவன், பார்வதி, முருகன், விநாயகர், கிருஷ்ணன் போன்று அலங்கரிக்கின்றனர். கிராமத்தில் உள்ள பெரியவர்கள் மாரியம்மன் கோயிலில் இருந்து வீடு, வீடாக சென்று அலங்கரிக்கப்பட்ட குழந்தைகளை கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து வருகின்றனர். அங்கு அவர்களை அமர வைத்து, கிராமத்து பெண்கள் கும்மியடித்து பாட்டுப்பாடுகின்றனர். பின் அம்மனுக்கு பொங்கல் படைத்து, குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. அதன் பின்பு கிராமத்தில் உள்ளவர்களுக்கு பொங்கல் வழங்கப்படுகிறது.

மீண்டும் குழந்தைகளை சுற்றி கும்மியடித்து, குலவையிட்டு குழந்தைகளின் நலனுக்காக வேண்டுதல் செய்யப்படுகிறது. குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படுகிறது.

அக்கிராமத்தை சேர்ந்த சிவசண்முகம் தெரிவித்ததாவது: பாரம்பரியமாக சைவ வேளாளர்

சமுதாயத்தில் இது போன்று குப்பி பொங்கல், காணும் பொங்கல் தினத்தன்று நடத்தப்பட்டு வருகிறது.

குழந்தைகள் கலை, கல்வியில் சிறந்து விளங்கவும், அவர்களிடமுள்ள கூச்ச சுபாவத்தினை போக்கும் விதமாகவும் இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது.

எங்களது முன்னோர் செய்து வந்ததை நாங்கள் செய்து வருகிறோம், என்றார்.

தங்கவேல் என்பவர் தெரிவித்ததாவது: குழந்தைகளை நாங்கள் தெய்வமாக மதிக்கிறோம். 'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று' என்ற கருத்தை மெய்ப்பிக்கும் விதமாக குப்பி பொங்கல் நடத்தப்பட்டு வருகிறது. பெண்கள் கும்மி அடிப்பதால், கும்மி பொங்கல் என்பது மருவி தற்போது குப்பி பொங்கல் என்றழைக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு திருஷ்டி கழிப்

பதற்காகவும்,நோயின்றி வாழவும் இந்நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது, என்றார்.






      Dinamalar
      Follow us