
பற்களை அலட்சியம் செய்தால், உடல் நலன் பாதிக்கப்படும்; உணவை அரைத்து சாப்பிடவும், சொற்களை தெளிவாக உச்சரிக்கவும் இயலாமல் போகும்.
பல் பாதுகாப்புக்கு கடைபிடிக்க வேண்டியவற்றை பார்ப்போம்...
* உணவிற்கு முன் மற்றும் பின், வாய் கொப்பளிப்பது நல்லது
* வேப்பங் குச்சியால் பல் துலக்கினால் உடலும், உள்ளமும் உறுதி பெறும்; பார்வை தெளிவாகும்
* புளிப்பு சுவையுள்ள உணவை அளவோடு உண்டால் பற்கூச்சம் வராது
* வாய் வழியாக சுவாசித்தால் பல் பழுதடையும்
* சூடாகவோ, அதிக குளிர்ச்சியாகவோ பானங்களை அருந்தினால், பற்களுக்கு சேதம் விளைவிக்கும்
* வெட்டும் பற்கள், கோரைப் பற்கள், முன் கடைவாய் பற்கள், பின் கடைவாய் பற்கள் என முளைத்திருந்தாலும், குறிப்பிட்ட வயதில், விவேகப் பற்கள் முளைக்கும்
* பல் சொத்தை, ஈறு வீக்கத்தை ஆரம்பத்தில் கவனிப்பது அவசியம்
* ஐஸ்கிரீம், சாக்லெட் சாப்பிடுவதை தவிர்த்து, பச்சைக் காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
பற்கள் உறுதியாக, கீரை, காய்கறி, பால், முட்டையை உணவாக எடுக்க வேண்டும். பற்களில் கரும்புள்ளி, ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்பட்டால், உடனே, பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

