sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

ஏமாற்றாதே!

/

ஏமாற்றாதே!

ஏமாற்றாதே!

ஏமாற்றாதே!


PUBLISHED ON : மார் 20, 2021

Google News

PUBLISHED ON : மார் 20, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சலவைத் தொழிலாளியிடம், கழுதை ஒன்று இருந்தது; அதற்கு தேவையான தீவனத்தை அவனால் தர இயலவில்லை; வயிறு நிறைய புல் மேய்வதற்கு மேய்ச்சல் நிலமும், அந்த பகுதியில் இல்லை.

கழுதையின் நிலை கண்டு மிகவும் கவலைப்பட்டான் தொழிலாளி.

ஒருநாள் -

காட்டு வழியே நடந்து சென்றான். அப்போது, இறந்த புலியைக் கண்டான்; ஒரு திட்டம் தீட்டினான்.

அவன் மனதில், 'இறந்த புலியின் தோலை உரித்து, கழுதை மீது போர்த்தி, வயல்களில் மேய விடலாம். உண்மையாக புலி மேய்வதாக எண்ணி, எதுவும் பேசாமல் இருந்து விடுவர் மக்கள்; கழுதை வயிறார மேயும்' என எண்ணினான்.

புலித்தோலை உரித்து, கழுதை மீது போர்த்தி, நன்கு விளைந்த வயல்களில் மேய விட்டான்.

அவன் எண்ணியபடியே பயந்து ஓடினர் மக்கள். வயல்களில் மேய்ந்த கழுதையை விரட்ட யாருமில்லை. வயிறு நிறைய மேய்ந்து கொழுத்தது கழுதை.

ஒருநாள் -

வயலில் கழுதை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, அந்தப் பக்கம் வந்த பெண் கழுதை ஒன்று, உரத்த குரலில் கத்தியது; அதைக் கேட்டதும், புலித்தோல் போர்த்தியபடி மேய்ந்த கழுதையும் உற்சாகத்துடன் கத்தியது.

இதை கண்டதும் திரண்டனர் மக்கள். ஏமாற்றி வயலில் மேய்ந்ததாக கழுதையை தடியால் அடித்து விரட்டினர்.

குழந்தைகளே... குறுக்கு வழிகள் என்றுமே பலன் தாராது; யாரையும் ஏமாற்ற கூடாது.

பொன்னையா ராஜேந்திரன்






      Dinamalar
      Follow us