PUBLISHED ON : செப் 20, 2013

அ நிறம் | அளவு
வங்காள மொழியில் சிறந்த எழுத்தாளர் சரத்சந்திரர். இவர் ஒருமுறை ரவீந்திர நாத் தாகூருடன் பேசிய போது தாகூரின் நூல்களைப் பாராட்டியும், வியந்தும் பேசினார்.
இதனை அருகிலிருந்து கவனித்த சரத்சந்திரரின் தீவிர வாசகர் ஒருவர், ''தாகூர் என்ன உங்களைப் போல் அவ்வளவு திறமை யானவரா? அவரைப் போய் நீங்கள் புகழ்கிறீர்களே? உங்கள் நூல்கள் ஆயிரக் கணக்கில் விற்பனையாகின்றன. ஆனால், அவருடைய நூல்கள் நூற்றுக்கணக்கில் கூட விற்பனையாவதில்லை,'' என்றார்.
அதைக்கேட்ட சரத்சந்திரர் உடனே, ''என்ன அப்படி சொல்கிறீர்? நான் எழுதிய புத்தகங்களை உங்களைப் போன்ற சாதாரண மக்கள் படிக்கின்றனர். தாகூரின் நூல்களை என்னைப் போன்றவர்கள் மட்டும்தான் படிக்கின்றனர்,'' என்றார்.
தாகூரை குறைவாக மதிப்பிட்ட அந்த வாசகர் வாயடைத்துப் போனார்.
