sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

உத்தரவும் செயலும்!

/

உத்தரவும் செயலும்!

உத்தரவும் செயலும்!

உத்தரவும் செயலும்!


PUBLISHED ON : ஏப் 10, 2021

Google News

PUBLISHED ON : ஏப் 10, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், மா.க.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2014ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...வகுப்பாசிரியை ஜெயந்தி, தமிழாசிரியையாகவும் இருந்தார்; மிகவும் கண்டிப்பானவர். தினமும் காலை, 9:30 மணிக்கு வகுப்பில் சிறுத்தேர்வு நடத்துவார். அன்றும் அதுபோல நடைபெற்றது. ஒவ்வொரு கேள்வியாக ஆசிரியை வாசிக்க, விடை எழுதினோம். தேர்வு முடிந்ததும் இறை வழிபாடு கூட்டத்திற்குச் சென்றோம். அன்றைய கூட்டத்திற்கு, எங்கள் வகுப்பு தான் பொறுப்பு. என்னை அழைத்த ஆசிரியை, 'நீதி போதிக்கும் சிறுகதை ஒன்று சொல்...' என்றார். எனக்கு, 'திக்' என்றது. அதுவரை மேடை ஏறி பழக்கம் இல்லை. முடியாது என்று சொல்லவும் மனமில்லை.ஒப்புக் கொண்டு, நேராக தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றேன். அன்று வெளியான சிறுவர்மலர் இதழை தேடி எடுத்து வந்து மேடை ஏறினேன். அந்த இதழை பார்த்து, கதையை கூறி முடித்தேன். கைத்தட்டல் ஒலி காதை பிளந்தது.இந்த வாய்ப்பை நல்கிய அந்த ஆசிரியருக்கும், அதை செயலாக்க உதவிய, 'சிறுவர்மலர்' இதழுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இப்போது என் வயது, 17; இன்றும் வகுப்பறையில் நான் தான் நீதிக்கதை சொல்கிறேன். ஒவ்வொரு கதை முடிவிலும், கைதட்டல் ஒலியைக் கேட்டு மகிழ்கிறேன்.- ரா.உதயகுமார், திருவள்ளூர்.தொடர்புக்கு: 63695 74531






      Dinamalar
      Follow us