PUBLISHED ON : ஆக 23, 2013

வி.ச.காண்டேகர் என்பவர், மராத்தி மொழியின் நாவலாசிரியர். அவரது நாவல்கள் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு வரவேற்பு பெற்றவை. ஒருசமயம் பகல் நேரத்தில் அவர் வீட்டில் இருந்தார். அப்போது, காலையில் பள்ளிக்கூடம் சென்றிருந்த அவரது பையன், சீக்கிரமாகவே வீட்டிற்குத் திரும்பி வந்தான்.
''இன்னைக்கு ஏன் இத்தனை சீக்கிரமாக வீட்டிற்கு வந்துட்டே?'' என்று கேட்டார் காண்டேகர்.
அதற்கு அவன், ''யாரோ பிரபலமானவராம், அவர் இறந்துவிட்டார். அதனால பள்ளிக்கூடத்திற்கு இன்னைக்கு விடுமுறை விட்டுட்டாங்க... ''அப்பா! நீங்க கூடத்தானே பிரபலமானவர். நீங்க இறந்துட்டாலும், எல்லாருக்கும் விடுமுறை கிடைக்குமா?'' என்று கேட்டான்.
''எல்லாருக்கும் விடுமுறை கிடைக்கும்னு நான் சொல்ல முடியாது. ஆனால், நான் இறந்தால் உனக்கு கண்டிப்பாக விடுமுறை கிடைக்கும்,'' என்று குறும்புடன் பதில் சொன்னார்.
***
