
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 1 கப்
மோர் - 4 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
வெண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு - சிறிதளவு
முந்திரி, கேரட் துருவல், கருவேப்பிலை, பெருங்காய தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசி மாவில் மோர் ஊற்றி நன்றாக கலக்கவும். கடாயில் எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, துண்டாக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். அதனுடன் மாவுக்கலவை, உப்பு, வெண்ணெய் போட்டு கிளறவும். பெருங்காய துாள் துாவி இறக்கிய பின், முந்திரி, கேரட் துருவல்களை போடவும்.
சுவை மிக்க, 'மோர்க்களி!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.
- எஸ்.யாழினி, செங்கல்பட்டு.

