sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!


PUBLISHED ON : ஜன 24, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 24, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவின் தேசியப் பாடல், 'வந்தே மாதரம்...' என, துவங்குகிறது. இதை, வங்காள எழுத்தாளர், பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதினார். அவர் எழுதிய, 'ஆனந்த மடம்' நாவலின் ஒரு பகுதியாக, இந்த பாடல் அமைந்திருந்தது.

'தாய் மண்ணே உன்னை வணங்குகிறேன்' என்பதே இப்பாடலின் பிரதான பொருள். ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிரான, விடுதலை முழக்கமாக இந்த பாடல் அமைந்தது.

கொல்கத்தாவில், 1896ல் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில், பிரபல கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இசையமைப்பில், முதன் முதலாக 'வந்தே மாதரம்' பாடப்பட்டது.

இப்பாடலை பொது இடங்களில் பாடுவதற்கு, ஆங்கிலேய அரசு தடை விதித்தது. தடையை மீறியோருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மகாத்மா காந்தி எழுதிய எல்லா கடிதங்களிலும், அதன் தலைப்பில், 'வந்தே மாதரம்' என, குறிப்பிட்டார்.

விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற வீரர் அரவிந்தர், 'வந்தே மாதரம் என்பது, நாட்டுப் பற்றை உருவாக்கும் மந்திரச் சொல்' என, புகழ்ந்தார்.

நம் நாட்டில், 'ஜன- கண- மன' என துவங்கும் தேசிய கீதத்துக்கு சமமான அந்தஸ்தை, 'வந்தே மாதரம்' பாடல் பெற்றுள்ளது. இது, தேசியப் பாடலாக, 1950, ஜன., 24ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதல் ஜனாதிபதி, ராஜேந்திர பிரசாத் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

- நிகி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us