sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

படிப்பு ஒழுங்கு!

/

படிப்பு ஒழுங்கு!

படிப்பு ஒழுங்கு!

படிப்பு ஒழுங்கு!


PUBLISHED ON : ஜன 13, 2024

Google News

PUBLISHED ON : ஜன 13, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை, சிங்கம்புணரி அரசு உயர்நிலைப் பள்ளியில், 1959ல், 6ம் வகுப்பு படித்த போது, வகுப்பாசிரியர் சீத்தாராம ஐயர் மிகவும் கண்டிப்பானவர். ஆங்கிலப் பாடம் நடத்துவதில் வல்லவர். ஒருநாள் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, மதிய உணவு இடைவேளைக்காக மணி ஒலித்தது.

அந்த சத்தத்தை கேட்டதும் வகுப்பறையை விட்டு பாய்ந்து ஓடினேன். போட்டி போட்டு ஓடுவோரை காணாததால் சற்று தயங்கி திரும்பி பார்த்தேன். யாரும் வெளியேறாமல் என்னை வேடிக்கை பார்த்ததை கண்டேன். தடுமாறிய என்னை, ஒருவன் திரும்ப அழைத்து சென்றான்.

வகுப்பறையை அடைந்ததும், கோபமாக திட்டி, கன்னத்தில் அடித்து தண்டித்தார் ஆசிரியர். மாணவர்கள் முன்னிலையில், இது நடந்ததால் மிகவும் அவமரியாதையாக எண்ணி வருந்தினேன். ஆசிரியர் சென்ற பின் தான் வெளியேற வேண்டும் என்ற பாடத்தை கற்றேன்.

என் வயது, 76; மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில், துணை நுாலகராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். எல்லா தருணங்களிலும், அந்த ஒழுங்கை கடைப்பிடிக்கிறேன். என்னை நல்வழிப்படுத்திய ஆசிரியரை நினைவில் தாங்கியுள்ளேன்.

- ஜி.தனசேகரன், மதுரை.

தொடர்புக்கு: 99442 57364







      Dinamalar
      Follow us