PUBLISHED ON : ஜன 27, 2024

உயிரோட்டத்திற்கு தேவையான நுண்ணுாட்ட சத்துகள், மூலிகை மற்றும் காய்கறிகளில் உள்ளன. இவற்றை நேரடியாக சாப்பிடலாம். சாறாக்கி குடித்தால் எளிதில் ரத்தத்தில் கலந்து பலன் தரும்.
உடலுக்கு நன்மை தரும், மூலிகை மற்றும் காய்களை தெரிந்து கொள்வோம்...
கேரட் சாறு: ரத்தத்தில் அதிகரிக்கும் யூரிக் அமிலத்தை வெளியேற்றும். சிறுநீரக கற்களை அகற்றும். ஈரல் நோய்கள், ரத்த சோகை, மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யும்.
முருங்கை இலை சாறு: நரம்பு கோளாறு தீரும். கண் நோய் குணமாகும்; சிறுநீர் எரிச்சல் சீராகும். ரத்தம், சிறுநீரில் சர்க்கரை அளவை கட்டுபடுத்தும்.
புதினா சாறு: மலச்சிக்கல் அகற்றும். வாய்வுத் தொல்லை, வயிற்றுக் கோளாறு போக்கும். சிறுநீர் பையில் கல் அடைப்பு போக்கும். குழந்தைகள் வயிற்றில் இருக்கும் பூச்சியை கொல்லும். நோய் எதிர்பாற்றலை வளர்க்கும்.
பீட்ரூட் சாறு: வாந்தியை போக்கும். சிறுநீரகத்தில் கல் உருவாவதை தடுக்கும்; தோல் அரிப்பு, நமைச்சலில் இருந்து பாதுகாக்கும்.
இஞ்சி சாறு: மறதி நோயை கட்டுப்படுத்தும். ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும்; இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மூட்டுவலி பிரச்னை குணமாகும். பசியின்மை, செரியாமை பிரச்னையை சரி செய்யும்.
நலம் தரும் சாறுகளை பருகி ஆரோக்கியம் பேணுவோம்.
- எஸ்.ராமதாஸ்