sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

தடை செய்யாதே!

/

தடை செய்யாதே!

தடை செய்யாதே!

தடை செய்யாதே!


PUBLISHED ON : மார் 23, 2024

Google News

PUBLISHED ON : மார் 23, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, தட்டாஞ்சாவடி, அரசு நடுநிலைப் பள்ளியில், 1985ல், 8ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...

வகுப்பில், 40 மாணவ, மாணவியர் எட்டு பெஞ்சுகளில் அமர்ந்திருப்போம்; தேர்வில் முதல் எட்டு இடங்களை பிடித்தவர்களை, பெஞ்சிற்கு ஒருவராக அமர்த்தி, காண்காணிக்கும் பொறுப்பு வகிக்க செய்தார், வரலாறு, புவியியல் ஆசிரியை வ.விஜயலட்சுமி.

பொறுப்புக்கு வந்ததும், முதல் நாள் நடத்திய பாடங்களில் இருந்து கேள்விகளை, மறுநாள் அவரவர் பெஞ்சில் இருப்போரிடம் கேட்டு சோதிக்க வேண்டும். நானும், ஒரு பெஞ்சிற்கு பொறுப்பு வகித்தேன்.

அன்று, என் பெஞ்சில் நண்பன் ஒருவன் பாடங்களை படிக்காமல் வந்திருந்தான். கேள்விகளுக்கு பதிலளித்ததாக கூறி, ஆசிரியையிடம் இருந்து தப்புவிக்க கெஞ்சினான்.

வேறு வழியின்றி அவ்வாறு செய்தேன்.

அன்று, நேரடியாக அவனிடம் கேள்வி கேட்டார் ஆசிரியை. தெரியாமல் முழித்தான். விபரம் அறிந்து என்னை திட்டி, 'உன் இரக்க குணம் பிறர் வளர்ச்சிக்கு தடையாக இருக்க கூடாது...' என்று அறிவுரைத்தார். அதில் பொதிந்திருந்த பொருளை உணர்ந்து தெளிந்தேன்.

என் வயது, 50; அரசு ஊழியராக பணி செய்கிறேன். அந்த ஆசிரியைக்கு சமீபத்தில் கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது அரசு. என் வாழ்த்தையும் தெரிவித்து மகிழ்ந்தேன்.

- மு.கண்ணன், புதுச்சேரி.






      Dinamalar
      Follow us