sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மனிதாபிமானம்!

மனிதாபிமானம்!

மனிதாபிமானம்!


PUBLISHED ON : ஏப் 13, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 13, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மயிலாடுதுறை, அரசு நடுநிலைப் பள்ளியில், 1968ல், 5ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...

தலைமை ஆசிரியராக இருந்த வீராச்சாமி அன்பாக பழகுவார்; கருணை உள்ளம் உடையவர். தாயை இழந்த வகுப்பு நண்பன் மாணிக்கம், சிறிய குடிசை வீட்டில் வசித்து வந்தான். கூலி வேலை செய்த அவன் தந்தை, படிப்புக்கு உதவி வந்தார். திடீரென நோய்வாய்பட்டு இறந்தார்.

நண்பனை ஆதரிக்க உறவினர் யாரும் இல்லை. தலையில் இடி விழுந்தது போல், மீள முடியாமல் அழுது புலம்பினான்.

அவனை ஆறுதல் படுத்திய பின், தலைமை ஆசிரியரிடம் சென்றோம். தந்தை இறப்பால், நண்பனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து எடுத்து கூறினோம். ஆதரவு இன்றி தவித்தவனுக்கு, உடனடியாக உதவ முன் வந்தார் தலைமை ஆசிரியர். ஆசிரியர்களிடம் பணம் திரட்டி, இறுதி சடங்கை முறைப்படி நடத்தி முடித்தார். அவரது சேவை மனதை தொட்டது.

என் வயது, 67; தனியார் நிறுவனத்தில் பணி செய்து ஓய்வு பெற்றேன். மனித நேயத்துடன் உதவிய அந்த தலைமை ஆசிரியரை தெய்வமாக மதித்து வணங்கி வருகிறேன்.

- டி.எஸ்.ராஜசெல்வன், புதுச்சேரி.

தொடர்புக்கு: 93602 66439

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us