sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மரம் நடு!

மரம் நடு!

மரம் நடு!


PUBLISHED ON : மே 04, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 04, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை மாவட்டம், பழையனுார், அரசு மேல்நிலைப் பள்ளியில், 2007ல், 7ம் வகுப்பு படித்த போது, வகுப்பு ஆசிரியையாக இருந்தார் இளமதி. மாணவர்களிடம், அன்போடு பழகுவார். பாடங்களை எளிதாக புரிய வைக்கும் தனித்திறன் உடையவர்.

சினிமா பாட்டு போல, குறட்பாக்களை பாடி பதிய வைப்பார். கதை போல, பாடங்களை கற்றுத் தருவார். படிப்பில், எந்த குறையும் ஏற்படாமல் கவனித்துக் கொள்வார்.

ஆண்டு இறுதியில், வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடிப்போருக்கு ஊக்கப் பரிசு வழங்குவார். படிப்பு மட்டுமின்றி, மரம் வளர்க்கும் ஆர்வத்தையும் ஊட்டினார்.

கல்வி ஆண்டு துவக்க நாளின் போதே, ஒரு மரக்கன்று நடச்சொல்வார். அதை, அந்தந்த வகுப்பு மாணவ, மாணவியர் தான், வேலி அமைத்து, தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். நன்றாக வளர்க்கும் குழுவுக்கு, ஆண்டு இறுதியில் பரிசு வழங்கி பாராட்டுவார். அவரது செயல்முறையால், மரங்கள் நட்டு பராமரிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது.

என் வயது, 28; இல்லத்தரசியாக இருக்கிறேன். அன்பும், பண்பும் நிறைந்த அந்த ஆசிரியையிடம் படித்த நாட்களை, பொற்காலமாக கருதுகிறேன். அவர் சொல்லி தந்த பாடங்களும், பழக்கமும் வாழ்வின் உயர்வுக்கு உதவுகின்றன.

- ப.லாவண்யா, விருதுநகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us