sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கருணை மனம்!

கருணை மனம்!

கருணை மனம்!


PUBLISHED ON : ஜூன் 15, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 15, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநெல்வேலி மாவட்டம், மானுார் ஒன்றியம், பார்வதியாபுரம், பரிசுத்த யோவான் நடுநிலைப் பள்ளியில், 1969ல், 7ம் வகுப்பு படித்த போது தலைமையாசிரியராக இருந்தார் அய்யாத்துரை தேவசகாயம். அது கடும் பஞ்சம் நிலவிய காலம். அனைவரையும் சமமாக பாவித்து சிறப்பாக நிர்வகித்தார்.

பள்ளியில், கிராமப்புற ஏழைகளே அதிகம் படித்தோம். அணிந்து செல்ல சரியான உடை இருக்காது. நைந்து கிழிந்தவற்றை உடுத்தியிருப்போம்.

மதிய உணவு திட்டத்திற்கு உணவு தானியங்கள் பெரிய துணிப்பைகளில் அனுப்பியது, கேர் என்ற நிறுவனம். ஏராளமாக குவிந்து கிடந்த அவற்றை கண்டதும், ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த முடிவு செய்தார் தலைமையாசிரியர். அவை பிரித்து உடைகளாக தைக்கப்பட்டன. தையல் பயிற்சி ஆசிரியைகள் குளோரி, எஸ்தர் வழியாக இது செயல்படுத்தப்பட்டது.

அதன்படி, தையல் கூலியாக, ஐந்து காசு மட்டும் கொடுத்து ஒரு கால் சட்டை வாங்க முடிந்தது. அதை அணிந்த போது, எந்த பொருளையும் வீணாக்க கூடாது என்ற கருத்து மனதில் ஆழமாக பதிந்தது.

எனக்கு, 66 வயதாகிறது; பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணி செய்து ஓய்வு பெற்றேன்.

பெரும் நெருக்கடி நிலவிய காலத்திலும், சீரிய முறையில் திட்டமிட்டு, கருணையுடன் உதவிய தலைமையாசிரியரை நன்றியுடன் நினைவில் பதித்துள்ளேன்.

- ரா.கணபதிராமன், திருநெல்வேலி.

தொடர்புக்கு: 94869 70459


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us