sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 27, 2026 ,சித்திரை 14, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

தயங்காத மனம்!

/

தயங்காத மனம்!

தயங்காத மனம்!

தயங்காத மனம்!


PUBLISHED ON : ஆக 29, 2020

Google News

PUBLISHED ON : ஆக 29, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, தே.பிரித்தோ உயர்நிலைப் பள்ளியில், 1965ல், 10ம் வகுப்பு படித்தபோது, தந்தை இறந்தார். வறுமையில் வாடியது குடும்பம். மேலும் ஓர் ஆண்டு படித்தால்தான், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுத முடியும். மிகக் கவலையுடன் சிந்தித்தேன்.

வகுப்பு ஆசிரியர் முத்துக்கிருஷ்ணனை, அம்மாவுடன் சென்று சந்தித்தேன். சோக மிகுதியால், 'உணவுக்கே வழியில்லாத நிலையில், தொடர்ந்து படிக்க வைக்க முடியுமா என்று தெரியவில்லை... நீங்கதான் வழி காட்டணும்...' என, கண்ணீர் மல்கினார் அம்மா.

எதையும் யோசிக்காமல், 'என் வீட்டில் தங்கி படிக்கட்டும்; எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்...' என தேற்றி கைச்செலவுக்கு, 200 ரூபாய் கொடுத்து அனுப்பினார் ஆசிரியர்.

வாக்களித்தபடி, குடும்பத்தில் ஒருவனாக பாவித்து அன்பும், ஆதரவும் தந்தார். அவரது உதவியால் நன்கு படித்தேன். தட்டச்சு பயற்சியும் பெற்றேன். அரசு பணியில் சேர்ந்து உயர்ந்தேன்.

என் வயது, 70; எந்த சூழ்நிலையிலும் தயங்காமல் உதவுவதை வழக்கமாக்கியுள்ளேன். அதைத் துாண்டிய ஆசிரியரை நன்றியுடன் மனதில் கொண்டுள்ளேன்!

- வெங்கட்ராமன், சென்னை.

தொடர்புக்கு: 94447 93594






      Dinamalar
      Follow us