PUBLISHED ON : ஜூலை 25, 2014
அ நிறம் | அளவு
பெய்ஜிங் நகரத்தில் நடந்த சம்பவம் இது. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வயதான விதவை, நான் மறுபிறவியில் புத்தரை மணக்க விரும்புவதாகவும், அதற்குத் தன்னை உயிருடனேயே ஒரு சவப்பெட்டியில் அடைத்துப் பெரிய சவக்கிடங்கில் புதைத்துச் சமாதி கட்டி விடும் படியும் தனது மகன்களிடம் கேட்டுக் கொண்டாள்.
தாய்ச் சொல்லைத் தட்டாத தனயன்களும் அவ்வாறே செய்யத் தொடங்கினர். ஆனால், போலீசார் தலையிட்டுச் சவப் பெட்டியில் அமர்ந்த அவளை அதிலிருந்து வெளியேறச் சொன்னார்கள். அவளும் மறுப்பு எதுவும் சொல்லாமல் எழுந்து விட்டாள். ஆனாலும் தான் மறுபிறவியில் புத்தரை மணக்கமுடியாமல் ஆகிவிட்டதே என்பதில் அவளுக்கு மனக்குறைதான். தொடர்ந்து புலம்பிக்கொண்டே இருந்தாள்.
