
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது, 59; சிறுவர்மலர் இதழின் நீண்ட கால வாசகன். தவறாமல் படிப்பதால், குழந்தை மனதுடன், இளமையாக இருப்பதாக உணர்கிறேன்.
உழைக்க வேண்டும்; பிறருக்கு உதவ வேண்டும்; சிரித்து வாழ வேண்டும் போன்ற போதனைகளை வலியுறுத்துகிறது, சிறுவர்மலர் இதழ். இவற்றை வாழ்வில் கடைபிடிக்கிறேன்.
கூரியர் தபால் விநியோகம், திருமண விருந்துகளில் உணவு பரிமாறும் வேலைகள் செய்து வாழ்கிறேன். மூட்டு வலி, சர்க்கரை நோய் பாதிப்பால் அயர்வு ஏற்பட்டாலும், ஓயந்துவிடவில்லை; உழைக்காமல் உறங்கியதில்லை. இதற்கு, சிறுவர்மலர் இதழே அடிப்படை காரணம்.
அக்கம் பக்கத்தில் வசிக்கும் குழந்தைகளும் என் அறிவுரையால் படித்து பயன்பெறுகின்றனர். அறிவுக்களஞ்சியமாக திகழும் சிறுவர்மலர் இதழ் மேலும் வளர வாழ்த்துகிறேன்.
- ஜி.விஜயகுமார், கோவை.
தொடர்புக்கு: 93447 36407

