PUBLISHED ON : டிச 24, 2022

அ நிறம் | அளவு
என் வயது 67; தினமலர் நாளிதழ், இணைப்பு இதழ்களை நுகரும் பேறு பெற்ற என் அனுபவத்தை ஒரு புத்தகமாகவே எழுதலாம்.
இந்த வயதிலும், சிறுவர்மலர் இதழுக்காக மனம் ஏங்கி நிற்கிறது. இதை எவ்வளவு பாராட்டினாலும் மிகையாகாது. இவ்வளவு அரிய ஆனந்தத்தை தந்து, சுண்டி இழுக்கும் சக்தி, 16 பக்கத்தில் வேறு எந்த இதழுக்கும் கிடையாது.
குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோரும் விரும்பி படிக்கும் இந்த மலர், சனிக்கிழமை மட்டுமே மலர்ந்து, தினமலர் நடுநிலை நாளிதழ் வாசகர்களின் தனிப்பட்ட சொத்தாகி வருகிறது.
சிறுவர்மலர் வருகைக்காக, ஒவ்வொரு சனிக்கிழமையும் காத்திருக்கிறேன்.
- சுப்ரமணியம் ஜெயதேவன்,
கோவை.
