sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

நிகழ்வின் சாட்சி!

/

நிகழ்வின் சாட்சி!

நிகழ்வின் சாட்சி!

நிகழ்வின் சாட்சி!


PUBLISHED ON : அக் 10, 2020

Google News

PUBLISHED ON : அக் 10, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, சர்வஜன பள்ளியில், 1959ல், 6ம் வகுப்பு படித்தபோது, வரலாறு ஆசிரியராக சந்தானம் இருந்தார். வகுப்பு தேர்வில், வரலாற்று நிகழ்வு ஒன்றின் ஆண்டை தவறாக குறிப்பிட்டு விட்டேன்.

அதைக் கண்டதும், 'பளார்' என கன்னத்தில் அறைந்து, 'சரித்திரம் என்பது ஒரு நிகழ்வின் சாட்சி... அதை, விருப்பப்படி மாற்ற முடியாது. நிகழ்வு நடந்த ஆண்டு சரியாக தெரியவில்லை என்றால், தவறாக குறிக்க கூடாது...' என அறிவுரை வழங்கினார்.

அதை மனதில் ஏற்று படித்தேன்; மேற்படிப்பை தொடர்ந்து உயர்ந்தேன்.

கோவையில் புகழ்பெற்ற கல்லுாரி மாணவியர் விடுதியில், 2009ல் பணியாற்றி வந்தேன். அந்த விடுதிக்கு கட்டணம் செலுத்த வந்திருந்தார் அந்த ஆசிரியர். என்னை அறிமுகம் செய்து, அவரிடம் அடிவாங்கிய சம்பவத்தை நினைவு கூர்ந்தேன்.

மிகவும் வியந்து, 'அடடே... 50 ஆண்டுகளுக்குப் பின்னும் நினைவில் வைத்துள்ளாயே...' என நெகிழ்ந்து, மகிழ்ச்சியுடன் நலம் விசாரித்தார்.

தற்போது என் வயது, 72; பள்ளிப்பருவ நினைவுகள் எல்லாம் பசுமையாக உள்ளன. அந்த ஆசிரியர் வலியுறுத்திய துல்லியத்தை, எல்லா செயல்களிலும் கடைபிடித்து வருகிறேன்.

- பீ.முரளி, கோவை.

தொடர்புக்கு: 98401 54561






      Dinamalar
      Follow us