sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2022ல் நடந்த வணிக நிகழ்வுகள்

/

2022ல் நடந்த வணிக நிகழ்வுகள்

2022ல் நடந்த வணிக நிகழ்வுகள்

2022ல் நடந்த வணிக நிகழ்வுகள்


PUBLISHED ON : ஜன 01, 2023

Google News

PUBLISHED ON : ஜன 01, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிப்.1: மத்திய பட்ஜெட் தாக்கல்.

பிப்.25: தேசிய பங்குச்சந்தை ஊழலில் அதன் முன்னாள் ஆலோசகர் ஆனந்த் சுப்ரமணியன் கைது.

பிப்.28: பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் (செபி) முதல் பெண் தலைவராக மாதவி புரி புச் பதவியேற்பு.

பிப்.26: எல்.ஐ.சி., நிறுவனத்தில் 20 சதவீத அன்னிய முதலீடுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

மார்ச்6: தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கில், அதன் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணன் கைது.

மார்ச்12: வருங்கால வைப்பு நிதி (2021 - 2022 ) வட்டி விகிதம் 8.50ல் இருந்து 8.10 சதவீதமாக குறைப்பு.

மார்ச்14: ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரியாக டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் நியமனம்.

மார்ச்18: தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் தியாகராஜன் தாக்கல்.

மார்ச்20: தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல். விவசாயிகள் இலவச மின் திட்டத்துக்கு ரூ. 5157 கோடி ஒதுக்கீடு.

மார்ச்23: இந்திய ஏற்றுமதி வர்த்தகம் (2021-22) ரூ. 30 லட்சம் கோடியை எட்டி சாதனை.

ஏப்.2: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே வரியற்ற பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து.

மே1: ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி, வருமானம் அதிபட்சமாக ரூ. 1.67 லட்சம் கோடியை எட்டி சாதனை.

மே4: ரெப்போ வட்டி விகிதத்தை 4.40 சதவீதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியது.

மே12: ஏர் இந்தியா சி.இ.ஓ., வாக காம்பெல் வில்சன் பதவியேற்பு.

மே17: பங்குச்சந்தையில் எல்.ஐ.சி., பங்கு (ஒன்று ரூ. 872) பட்டியலிடப்பட்டது.

மே20: கனடாவில் 'மெர்சிடஸ் - பென்ஸ் 300 எஸ்.எல்.ஆர்.' கார்(1955 மாடல்) அதிக தொகைக்கு (ரூ. 1100 கோடி) ஏலம் போனது.

ஜூன்24: மும்பை பங்குச்சந்தை (பி.எஸ்.இ.,) தலைவராக எஸ்.எஸ்.முந்த்ரா பதவியேற்பு.

ஜூன்24: 'நிடி ஆயோக்' தலைமை செயல் அதிகாரியாக பரமேஸ்வரன் அய்யர் பதவியேற்பு.

ஜூன்27: மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவராக நிதின் குப்தா பதவியேற்பு.

ஜூன்28: ரிலையன்ஸ் ஜியோ தலைவரானார் ஆகாஷ் அம்பானி.

ஜூலை4: சென்னை முதலீட்டாளர் மாநாட்டில், ரூ. 1.25 லட்சம் கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின.

ஜூலை18: தேசிய பங்குச்சந்தை தலைமை செயல் அதிகாரியாக ஆசிஷ் குமார் சவ்கான் பதவியேற்பு.

ஜூலை22: சென்னையில் 25 ஆண்டாக செயல்பட்ட அமெரிக்காவின் போர்டு நிறுவன தொழிற்சாலை மூடப்பட்டது.

ஆக.30: 'புளூம்பெர்க் பில்லியனர்' உலக பணக்காரர் வரிசையில் மூன்றாம் இடம் பெற்றார் இந்தியாவின் கவுதம் அதானி. சொத்து மதிப்பு ரூ. 11.40 லட்சம் கோடி.

அக்.1: இந்தியாவில் '5ஜி' தொழில்நுட்பத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அக்.19: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு (83) வரலாறு காணாத சரிவை சந்தித்தது.

அக்.22: 'ரிலையன்ஸ் நிறுவனம் '5ஜி' சேவையை தொடங்கியது.

அக்.27: 'டுவிட்டர்' நிறுவனத்தை அமெரிக்காவின் எலான் மஸ்க் ரூ. 3.5 லட்சம் கோடிக்கு கையகப்படுத்தினார்.

நவ.2: டுவிட்டரில் ப்ளூ டிக் கணக்குகளுக்கு மாதம் ரூ. 660 கட்டணம் விதிக்கப்படும் என அறிவிப்பு.

நவ.16: 'நிடி ஆயோக்' நிரந்த உறுப்பினராக அர்விந்த் விர்மானி நியமனம்.

நவ.17: 'மெட்டா' நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவராக சந்தியா தேவநாதன் பதவியேற்பு.

நவ.30: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல்முறையாக 63 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது.

நவ.30: சில்லறை வர்த்தகத்துக்கான டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.






      Dinamalar
      Follow us