தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச் சோலை!

கவிதைச் சோலை!

கவிதைச் சோலை!


PUBLISHED ON : ஜூலை 07, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 07, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உண்மையும்..... பேருண்மையும்...!

* அடுப்பங்கரையும்

பள்ளியறையுமே

அகிலமாயிருந்தது

பாட்டிமார் காலத்தில்!

* அடுப்பு, படுக்கையோடு

அருகிலிருந்த பள்ளிக்கும்

செல்ல முடிந்தது

அம்மாக்கள் காலத்தில்!

* கல்லூரிகளில் படித்து

அறிவைப் பெருக்கி

அலுவலகப் பணியும்

சாத்தியமாயிற்று

அக்காமார் காலத்தில்!

* நாகரிகத்தின் மாற்றங்கள்

நவீன உடைகள்

அலைபேசி, காதல் என

சுதந்திரம் கிடைத்தது

தங்கைமார் காலத்தில்!

* அலைபேசியால் அளவான பேச்சு

முகமறியாதவரோடு, 'சாட்டிங்'

என்பது சுதந்திரத்தின் உச்சம்...

தானியங்கி வாகனங்களை

தானே இயக்குகின்றனர்

பேத்திமார் இக்காலத்தில்!

* தலைமுறைக்கு தலைமுறை

பெண்ணினம் முன்னேறி

படிப்பு, பணி, பணம் என

வளம் பெருகியது உண்மை...

பாட்டி, அம்மாக்கள்

காலத்திலிருந்த

அன்பு, பண்பு, நேசம்

சுருங்கிப் போனதென்பதும்

பேருண்மைதான்!

எஸ்.சங்கர், திருப்பரங்குன்றம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us