sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச் சோலை!

/

கவிதைச் சோலை!

கவிதைச் சோலை!

கவிதைச் சோலை!


PUBLISHED ON : ஜூலை 07, 2013

Google News

PUBLISHED ON : ஜூலை 07, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உண்மையும்..... பேருண்மையும்...!

* அடுப்பங்கரையும்

பள்ளியறையுமே

அகிலமாயிருந்தது

பாட்டிமார் காலத்தில்!

* அடுப்பு, படுக்கையோடு

அருகிலிருந்த பள்ளிக்கும்

செல்ல முடிந்தது

அம்மாக்கள் காலத்தில்!

* கல்லூரிகளில் படித்து

அறிவைப் பெருக்கி

அலுவலகப் பணியும்

சாத்தியமாயிற்று

அக்காமார் காலத்தில்!

* நாகரிகத்தின் மாற்றங்கள்

நவீன உடைகள்

அலைபேசி, காதல் என

சுதந்திரம் கிடைத்தது

தங்கைமார் காலத்தில்!

* அலைபேசியால் அளவான பேச்சு

முகமறியாதவரோடு, 'சாட்டிங்'

என்பது சுதந்திரத்தின் உச்சம்...

தானியங்கி வாகனங்களை

தானே இயக்குகின்றனர்

பேத்திமார் இக்காலத்தில்!

* தலைமுறைக்கு தலைமுறை

பெண்ணினம் முன்னேறி

படிப்பு, பணி, பணம் என

வளம் பெருகியது உண்மை...

பாட்டி, அம்மாக்கள்

காலத்திலிருந்த

அன்பு, பண்பு, நேசம்

சுருங்கிப் போனதென்பதும்

பேருண்மைதான்!

எஸ்.சங்கர், திருப்பரங்குன்றம்.






      Dinamalar
      Follow us