
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாறாதது!
கடலேதும்
வற்றியிருக்கிறதா
உலகில்!
கனவிலேனும்
சுட்டிருக்கிறதா
நிலவு!
என்றாவது
மேற்கில் உதித்திருக்கிறதா
சூரியன்!
கணமேனும்
சுருங்கியிருக்கிறதா
தன்னளவில் வானம்
எப்போதாவது வந்தாலும்
தன் வண்ணத்திலிருந்து
மாறியிருக்கிறதா வானவில்!
எப்போது பொழிந்தாலும்
பூமியை நோக்கி தானே
இந்த மழை!
மாறவே மாறாத
இயற்கையை போல் தான்
இருக்கிறேன் நானும்...
தீராத கடலோடும்
தீர்ந்து விடாத
உன் நினைவுகளோடும்!
— இ.எஸ்.லலிதாமதி, சென்னை.