தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச் சோலை!

கவிதைச் சோலை!

கவிதைச் சோலை!


PUBLISHED ON : ஆக 07, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 07, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புறங்கூற்று

* குற்றம் சொல்லவும்

குறைகள் பேசவும்

முற்றம் தேவையில்லை

இவர்களுக்கு!

* வென்றவனைக் கண்டால்

அதிர்ஷ்டம் என்று

அலட்டிக் கொள்வர்!

* தோற்றவனை கண்டால்

தேவை தானா என்று

எகத்தாளம் பேசுவர்!

* உள்ளவனைக் கண்டால்

கொள்ளை அடித்த பணமென்று

குற்றம் சொல்வர்!

* இல்லாதவனைக் கண்டால்

பிழைக்க தெரியாதவனென்று

இகழ்ந்து பேசுவர்!

* தப்பு செய்தவன்

தண்டனை பெற்றால்

சட்டம் சரியில்லை என்பர்!

* தப்பு செய்யாதவன்

தண்டனை பெற்றால்

சரியான நீதி என்பர்!

* பிழைப்பு தேடி

பிற நாடு சென்றால்

பேராசை பிடித்தவன்

என்று பிதற்றுவர்!

* உழைப்பு தேடி

உள்நாட்டில் உலவினால்

ஊர் சுற்றியென்று

உதாசினம் செய்வர்!

* ஊருக்கு உதவினால்

ஊர்கழுதை என்று

பட்டம் சூட்டுவர்!

* சும்மா சுற்றினால்

சோம்பேறி என்று

முத்திரை குத்துவர்!

* மற்றவர் குறைகளை

மணிக்கணக்கில் பேசும்

இவர்களுக்கு

ஒரு நிமிஷம் கூட

கிடைப்பதில்லை

தம் குறைகளை

நினைத்துப் பார்க்க!

க.அழகர்சாமி,

கொச்சி.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us