sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : மே 31, 2020

Google News

PUBLISHED ON : மே 31, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தா. பிறைமதி, விருதுநகர்: வயதான பெற்றோரை, வீட்டை விட்டு வெளியேற்றி விட்டு, 'பிள்ளைகள் செத்துப் போய் விட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள்...' எனக் கூறும், மகன்களுக்கு என்ன அறிவுரை கூறலாம்?

அவர்களுக்கும் வயதாகும்... பிள்ளைகள் உள்ளனர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளக் கூறுங்கள்.

வி.பார்த்தசாரதி, சென்னை: வரும் தேர்தலில், எந்த கட்சியோடு கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ்?

அனேகமாக, தனித்து போட்டியிட வேண்டி இருக்கும். தி.மு.க., தலைவர் உட்பட, அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு, காங்கிரசின் போக்கு பிடிக்கவில்லை; கழற்றி விடவே முயல்கின்றனர்!

டி.பசுபதி, ஊஞ்சவேலம்பட்டி, கோவை: லஞ்சம் கொடுப்பவர், வாங்குபவர் - இவர்களில், உங்கள் பார்வையில் யார் முதல் குற்றவாளி?

இரண்டாமவர் தான்! அவர் கை நீட்டுவதால் தானே, முதலாமவர் கொடுக்க வேண்டி இருக்கிறது; அவர் காரியம் முடிய, 'கொடுக்க' வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்.



ர.ரேவதி, விழுப்புரம்: 'கொரோனா'வால் பல வார இதழ்கள், தினசரிகளின் இணைப்புகள் சரிவர கிடைப்பதில்லை. உங்களால் மட்டும் எப்படி முடிகிறது?


ஏஜன்டுகள், சப் - ஏஜன்டுகள், லைன் மேன்களின் ஒத்துழைப்பால் முடிகிறது. நம் நாளிதழ் மீது அவர்கள் வைத்திருக்கும், அன்பாலும், மதிப்பாலும், நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையாலுமே இது முடிகிறது!

* எஸ்.ஜெயம் சதாசிவம், மதுரை: நாட்டில் நிலவும் இந்த கஷ்டத்திலும், எந்த, எம்.எல்.ஏ.,வும் நிவாரண நிதி வழங்கவில்லையே... ஏன்?

அடுத்த ஆண்டு வரப்போகும் சட்டசபைத் தேர்தல், அவர்கள் கண் முன் நிற்கிறதோ என்னவோ! ஓட்டுக்கு பணத்தை அள்ளி வீச வேண்டுமே!

இந்து குமரப்பன், விழுப்புரம்: தன் மனைவி ஜோதிகா கூறிய கருத்தில், தான் உறுதியாக இருப்பதாக, கணவர் சூரியா கூறியுள்ளதைப் பற்றி?

தான் சார்ந்துள்ள மதத்திற்கு, இந்து மதத்தைச் சேர்ந்த, கணவர் சூரியாவை மாற்றி விட்டாரோ ஜோதிகா என்ற கருத்து, இவரது அறிக்கை மூலம் சந்தேகத்தைக் கிளப்புகிறது.

ச.சபானா, துாத்துக்குடி: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அகவிலைப்படி உயர்வை அரசு நிறுத்தி வைத்துள்ளது சரியா?

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளமே கிடைக்கவில்லை; வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் தவிக்கின்றனர். இவர்களுக்கு என்ன குறைவாம்? அரசு முடிவு சரியானதே!






      Dinamalar
      Follow us