sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : பிப் 28, 2021

Google News

PUBLISHED ON : பிப் 28, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஆர். கோபால், திருச்சி: மக்களுக்கு புரியாமல் பேசி, 'டார்ச்சர்' கொடுத்து வருகிறாரே கமல்?

அதனால் தான் அவர் கட்சிக்கு, 'டார்ச்' சின்னம் கொடுத்திருக்கின்றனரோ, என்னவோ!

ஆர். கோவிந், கோவை: என் நண்பன் எப்போதும் சிடு சிடு என்று எரிந்து விழுகிறானே...

ஒழுங்காக மலம் கழிக்கிறாரா எனக் கேளுங்கள்... நல்ல ஜீரண சக்தி உள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்... மலச்சிக்கல் மற்றும் அஜீரண கோளாறு ஆகிய இரண்டும் இல்லாதவர்களுக்கு, சிடு சிடுப்பு வராது!

* வி. ராஜா, சென்னை: ஓட்டளிக்கும் முன், வாக்காளர்களின் சிந்தனை எப்படி இருக்க வேண்டும்?

இவர்கள், லஞ்சம், ஊழல் இல்லாத நல்லாட்சி தருவரா என்ற சிந்தனை இருக்க வேண்டும்! ஆனால், கமல் கட்சி தான் இப்போதைக்கு நினைவில் வரும்; ஏனென்றால், இதுவரை அவர் ஆட்சியில் இருந்ததில்லை!

எஸ். மோகினி, தேனி: அதிர்ஷ்டம் பற்றிய உங்கள் கருத்து என்ன?

அது, சோம்பேறிகளின் எண்ணம். இரும்பு இதயம் கொண்டோர், இந்த வார்த்தையை நினைத்துக் கூட பார்ப்பதில்லை!

* என். ராஜகோபாலன், கோவை:என் நண்பனிடம் நிறைய பணம் உள்ளது; ஆனால், அதனால், அவன் பெற முடியாதது எது?

அறிவை பெற முடியாது! புகழையும், பொருளையும் பணத்தால் பெற்று விட முடியும். அறிவு இல்லாதவனிடம் பணம் தங்காது!

ஆர். நாராயணன், சென்னை: ஒரு மனிதன் எப்போது சிந்திக்கிறான்?

தோல்வி ஏற்படும்போது சிந்திக்கிறான். சிந்தித்தால் திட்டம் கிடைக்கும்; அது கிடைத்து விட்டால் துணிவு கிடைக்கும்; அப்புறம் வெற்றி தானே!

கு. கணேசன், மறைமலைநகர்: கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாதபோது என்ன செய்யலாம்?

உங்கள் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளை மனதில் கொண்டு வாருங்கள்... கோபம் பறந்து போய் விடும்!

எம். கருணாகரன், தென்காசி: 'கொரோனா' காலத்தில், தமிழ் பட உலகம் எப்படி இருக்கிறது?

முழுகுமோ அல்லது நீந்தி கரை சேருமோ என்ற நிலையில் இருக்கிறது...






      Dinamalar
      Follow us