PUBLISHED ON : பிப் 14, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் குண்டானவர்களாக இருக்கின்றனர். இதற்கு காரணம், 'கோகோ கோலா' என்று தெரிய வந்தது. இங்குள்ள மக்கள், காலையில் எழுந்து, வேலைக்கு போவதற்குள், மூன்று லிட்டர், 'கோலா' குடிக்கின்றனர். அத்துடன் குழந்தைகளுக்கு பால் புட்டிகளில், கோலாவை ஊற்றிக் கொடுக்கின்றனர்.
கடந்த, 2000ம் ஆண்டில், இந்நாட்டின் ஜனாதிபதியாக, தேர்ந்தெடுக்கப்பட்டார் விசின்ட் போக்ஸ். இவர், கோகோ கோலா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!
— ஜோல்னாபையன்.

