PUBLISHED ON : செப் 14, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்பெயின் நாட்டு தலைநகரான, மாட்ரிட் நகரை, ஐரோப்பாவின் உணவு தலைநகர் என, அழைப்பர். இங்கு ஆயிரக்கணக்கான உணவு விடுதிகளும், 'பார்'களும் இயங்குகின்றன. இதுதவிர, 3,000க்கும் மேற்பட்ட, துரித உணவு விடுதிகளும் உண்டு. இங்கு மட்டும் இவ்வளவு உணவு விடுதிகள் எப்படி வந்தன என்பதற்கு, வரலாறு உண்டு.
கடந்த, 13ம் நுாற்றாண்டில் ஸ்பெயின் நாட்டை ஆண்ட, அல்போன்சா என்ற மன்னர், 'குடிமகன்'கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். அக்காலத்தில், 'பார்'களில், மது அருந்திவிட்டு எதுவும் சாப்பிடாமல் சென்று விடுவர், மதுபிரியர்கள்.
இதை கவனித்த மன்னர், 'பார்களுடன் கட்டாயம் உணவு விடுதிகள் வேண்டும்...' என, உத்தரவு போட்டார். இப்படி தான் இங்கு ஆயிரக்கணக்கில் உணவு விடுதிகள் தோன்றின.
— ஜோல்னாபையன்

