sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/தீ விபத்தா... கவலைப்பட வேண்டாம்!

தீ விபத்தா... கவலைப்பட வேண்டாம்!

தீ விபத்தா... கவலைப்பட வேண்டாம்!


PUBLISHED ON : மார் 26, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 26, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக, தீ விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அச்சமயங்களில், என்னென்ன முன்னெச்சரிக்கைகளை, மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்வோமா...

* உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி விட வேண்டும்.

* தரமான, மடிக்கக்கூடிய ஏணிகளை தயாராக வைத்திருப்பது நல்லது.

* ஜன்னல் கதவுகளை உடனடியாக திறந்து வையுங்கள்.

* திரைச்சீலைகள் சட்டென்று கழற்றப்பட கூடியதாக இருக்கட்டும்.

* உங்கள் வீட்டில், இருட்டில் ஓரிரு முறை நடந்து பழகுங்கள். அதாவது, எந்தெந்த வழிகளில், நீங்கள் வெளியேற வேண்டியிருக்கும் என்பது, இருட்டிலும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

* வீட்டில் உள்ள மின் இணைப்புகளுக்கு, தரமான ஒயர்களை பயன்படுத்துவது அவசியம்.

* உள்ளூர் தீயணைப்பு நிலையம் எங்குள்ளது என்பதையும், அதன் தொலைபேசி எண்ணையும் தெரிந்து கொள்ளுங்கள்.

* வீட்டிலோ, அருகிலோ தீயணைப்பு கருவி இருந்தால், அதை எப்படி கையாள வேண்டும் என்பதை, முன்னதாகவே தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

* தீப்பற்றி எரியும் போது, தவழ்ந்தபடியே வெளியேறுங்கள். ஏனெனில், அடர்ந்த புகையும், நச்சுக்காற்றும், மேற்புறம் தான் அதிகமிருக்கும்.

* வெளியேறும் இடத்தில் புகை சூழ்ந்திருந்தால், மற்றொரு வழி இருந்தால், அவ்வழியே வெளியேறுங்கள்.

* முகத்தை, ஈரமான துணியால் மூடியபடி வெளியேறவும்.

* தீப்பிடித்த வீட்டிலிருந்து வெளியேற, கனமான பெட்ஷீட்டை, உடல் முழுவதும் சுற்றியபடி வெளியேறவும்.

* உங்கள் துணியில், தீப்பற்றி விட்டால், உங்கள் முகத்தை, கைகளால் மூடியபடி, கீழே படுத்து, இப்படியும், அப்படியும் உருளுங்கள்.

* வேறு யாருடைய உடையிலாவது தீப்பற்றிக் கொண்டால், அவர் மீது, தண்ணீரை ஊற்றுங்கள்.

* வெளியேறும் போது, கதவை திறப்பதற்கு முன், கைப்பிடியை தொட்டுப் பாருங்கள்; அது சூடாக இருந்தால், கனமான துணியால் பிடித்து, திறக்கவும்.

* தீப்பிடித்த சமயத்தில், நீங்கள் வெளியேறும் முயற்சியில், எந்த கதவை திறப்பதாக இருந்தாலும் முதலில், சிறிதளவு திறந்து பாருங்கள். மறுபுறம் தீயோ, அடர்ந்த புகையோ தெரிந்தால், சட்டென்று மூடிவிடவும்.

* எல்லாவற்றுக்கும் மேலாக பதற்றப்படாமல் அங்கிருந்து தப்பிப்பதற்கான வழிமுறையை மட்டுமே சிந்தித்து, செயல்பட வேண்டும்.

* வீட்டில் எப்போதும் ஒரு டிரம் நிறைய தண்ணீர் இருக்கட்டும்.

* தீ விபத்து ஏற்பட்டவுடன், உங்கள் வீட்டிலுள்ள காஸ் சிலிண்டர் கனெக் ஷனை எடுத்து விடுங்கள்; முடிந்தால் சிலிண்டரை வீட்டுக்கு வெளியே கொண்டு வந்து விடவும்.

* மின்சார பியூஸ் கேரியரை கழட்டி விடுங்கள்.

* டிவி, மிக்சி, கிரைண்டர் போன்ற மின் சாதனங்களின் பிளக்கை உடனடியாக கழட்டி விடுங்கள்.

* உடைந்து போன மரச்சாமான்கள், மெத்தை, நாளிதழ்கள் மற்றும் புத்தகங்கள் போன்ற வேண்டாத குப்பைகளை அவ்வப்போது ஒழித்துக் கட்டுங்கள். வருமுன் காப்பது நல்லது!

ஜி.எஸ்.எஸ்.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us