PUBLISHED ON : பிப் 18, 2018

அ நிறம் | அளவு
இந்தியாவின் முதல் பெண் பத்திரிகை புகைப்பட கலைஞர், ஹோமாய் வியாராவாலா. 1930ல், மும்பையிலிருந்து வெளிவந்த, 'இல்லஸ்டிரேட்டட் வீக்லி'யில் பணியாற்றினார். உடன் பணிபுரிந்தவரும் நண்பருமான, மனேஷா என்பவரை மணந்தார். நாடு சுதந்திரம் அடைந்தபோது, அந்த காட்சிகளை படம் பிடித்தார். அன்றைய தலைவர்கள் எவரும் இவர் கேமராவிலிருந்து தப்பவில்லை. 'எங்கிட்ட எதுவும் இல்லை; எல்லாம் கேமராக்கள் செய்கிற வித்தை...' என்று கூறிய இவர், 2012ல், தன் 99வது வயதில் காலமானார்.
— ஜோல்னாபையன்.
