PUBLISHED ON : நவ 26, 2017

அ நிறம் | அளவு
படத்திலுள்ளவர் பெயர், அய்யப்பன்; வயது, 79. இவரது, மனைவி சரஸ்வதி, வயது, 70. இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர்கள், கேரள மாநிலம், பாலக்காடு, மண்ணுாரில் உள்ள தங்கள் வீட்டில், 'விருந்தாவனம்' என்ற பெயரில் கல்லறை கட்டி, மரணிக்கும் நாளுக்காக காத்திருக்கின்றனர்.
இவர்களுக்கு இரு மகன்கள்; அரபு நாடான ரியாத்தில் குடும்பத்துடன் வசிக்கும் அவர்கள் அனுப்பும் பணம் மற்றும் அய்யப்பனின் ஓய்வு ஊதியத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இக்கல்லறையை வேடிக்கை பார்க்க தினமும் பலர் வருகின்றனர்.
'எல்லா வீடுகளிலும் அடுக்களை, சாமி அறை கட்டுவது போல கல்லறையும் கட்டியுள்ளேன்...' என்கிறார் அய்யப்பன்.
— ஜோல்னா பையன்.
