PUBLISHED ON : ஜூன் 05, 2022

அ நிறம் | அளவு
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் இருக்கிறது அகஸ்தியர் கூடம். மிகவும் அடர்த்தியான காட்டு பகுதியான இங்கு, கொடிய விலங்குகளும் உள்ளன.
இங்கு, வெள்ளையர் ஒருவருக்கு சொந்தமான தோட்டம் இருந்தது. அவருக்கு நான்கு சகோதரிகள் இருந்தனர். இவர்களில் லிஸ்லி என்பவர், கேரளாவை மிகவும் நேசித்தார். நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததும், லிஸ்லியின் மூன்று சகோதரிகளும் அண்ணனுடன் இங்கிலாந்து போயினர். லிஸ்லி மட்டும் அகஸ்தியர் கூடத்திலேயே தங்கி விட்டார். அவர், பல ஆண்டுகள் இங்கேயே வாழ்ந்து மறைந்தார். அவருடைய கல்லறை அங்கே இருப்பதை இன்றும் காணலாம்.
— ஜோல்னாபையன்
