PUBLISHED ON : செப் 13, 2020

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்தது, ஒரு குடும்பம். அக்குடும்பத்தில் இருந்த சிறு குழந்தைக்கு, வயது, 4. திடீரென்று ஒருநாள், வீட்டினுள் தீ பிடிக்க, அதனுள் சிக்கிக் கொண்டாள், குழந்நை டெய்டிரி.
அதை கண்ட தீயணைப்பு வீரர், தன் உயிரை துச்சமாக மதித்து, அந்த குழந்தையை காப்பாற்றி வெளியே அழைத்து வந்தார். இது நடந்து, 37 ஆண்டுகள் ஓடி விட்டன.
ஆனால், டெய்டிரியின் மனதில், தன்னை காப்பாற்றியவரை சந்திக்க வேண்டும் என்ற ஆவல், துளிர் விட்டுக் கொண்டே இருந்தது. இப்போது, டெய்டிரி ஒரு நர்ஸ். கணவர், குழந்தைகளுடன் அமெரிக்காவின் விர்ஜீனியா பகுதியில் வசித்து வருகிறார்.
'கொரோனா' பாதிப்பால், சிக்கல் அதிகமானபோது, உதவிக்காக, நியூயார்க் வந்தார்.
மருத்துவமனை டாக்டர்கள், நர்ஸ்களின் சேவையை பாராட்ட, தீயணைப்பு வீரர்கள் வந்திருந்தனர்.
அவர்களிடம், சிறு வயதில், தான் விபத்திலிருந்து, ஒரு தீயணைப்பு வீரரால் காப்பாற்றப்பட்டதை கூறி, அப்போது, நாளிதழ்களில் வெளியான புகைப்பட கட்டிங்குகளை காட்டி, அவரை பற்றி விசாரித்தார்.
காப்பாற்றிய வீரர், இயுஜெனி புக்லீஸ் என, கண்டுபிடித்தனர், தீயணைப்பு வீரர்கள்.
அவருக்கு தற்போது, வயது, 75. உயிருடன் உள்ளார்.
இதையடுத்து, இயுஜெனி புக்லீசும், நர்ஸ் டெய்டிரியும், சந்தித்து பேச ஏற்பாடு செய்தனர்.
- ஜோல்னாபையன்

