PUBLISHED ON : மார் 01, 2020

அ நிறம் | அளவு
நிர்பயா கொலை வழக்கில், சம்பந்தப்பட்டோரை, துாக்கில் போடப் போகும், பவன்குமார் ஜலாத்துக்கு, துாக்கு முயற்சி, இதுவே முதல் முறை.
தந்தை, தாத்தா என, எல்லாருக்குமே, துாக்கில் போடுவது தான் வேலை. இருவரை துாக்கில் போட்டார், தந்தை; 15 பேரை துாக்கில் போட்டுள்ளார், தாத்தா.
இதையெல்லாம் விடுங்க... துாக்கு போடுவதில் சாதனையாளர் யார் தெரியுமா?
பிரிட்டனை சேர்ந்த, ஆல்பெர்ட் பியரிபாய்ன்ட். இவர், 600 பேர் வரை, துாக்கில் போட்டுள்ளார்.
கடந்த, 1931 - 1956ம் ஆண்டுகளுக்கு இடையே, இவர், துாக்கில் போட்டதன் மூலம், கொலைகள் குறைந்ததா என்பது பற்றி, அவரது நினைவு நுாலில், 'இல்லவே இல்லை... மாறாக, இப்படி தண்டனை அளிப்பதால், பழி வாங்கவே, வழி வகுத்துள்ளது...' என, குறிப்பிட்டுள்ளார்.
—ஜோல்னாபையன்.
