sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தீபாவளி பற்றிய தகவல்கள்

/

தீபாவளி பற்றிய தகவல்கள்

தீபாவளி பற்றிய தகவல்கள்

தீபாவளி பற்றிய தகவல்கள்


PUBLISHED ON : அக் 27, 2019

Google News

PUBLISHED ON : அக் 27, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இந்தியாவில் மட்டுமின்றி, அண்டை நாடுகளான, வங்கதேசம், இலங்கை, மலேஷியாவிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஆனால், பெயர்களும், கொண்டாடும் முறைகளிலும் மாற்றம் இருக்கும்.

* தமிழகத்தில், தீபாவளியன்று, சிறுவர்கள் பட்டாசு வெடிக்க விரும்புவர். ஆனால், குஜராத் மாநிலத்தில், தீபாவளி அன்று யாரும் பட்டாசை பற்றி நினைப்பதில்லை. அதற்கு பதிலாக, சிறுவர் முதல் பெரியவர் வரை, விதவிதமான பட்டங்கள் செய்து, வானில் பறக்க விட்டு மகிழ்வர்.

* காசியில், பிரசித்தி பெற்ற அன்னபூரணி கோவில் இருக்கிறது. இந்த கோவிலில், தீபாவளி சமயத்தில், மூன்று நாட்களுக்கு மட்டும், தங்க அன்னபூரணியாக காட்சி அளிப்பார்.

* நரகாசுரனை, அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணெய் தேய்த்து தலை முழுகினார். அதுதான் இன்றளவும் தீபாவளியன்று, அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கமாக தொடர்கிறது.

* தாய்லாந்தில், தீபாவளியன்று, வாழை மட்டைகளில் விளக்கு ஏற்றி வைத்து, அதை நீரில் விட்டு வழிபடுவர்.

* தீபாவளி என்றால், பட்டாசுகளும், பிரகாசமிடும் அகல் விளக்குகளும் இணைந்தே நினைவிற்கு வரும். இதற்கு ஒரு காரணம் உண்டு. விளக்குகளை ஏற்றி வைப்பதன் மூலம், வீடுகளில் இருள் விலகி, வளம் பெருகும் என்பது ஐதீகம்.அயோத்திக்கு, ராமரும் - சீதையும் வந்தபோது, அந்நகர மக்கள் விளக்கேற்றி வைத்தனர் என்ற புராண வழக்கமும், இன்னொரு காரணமாக சொல்லப்படுகிறது.






      Dinamalar
      Follow us