sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/தர்மம் செய்தால் மட்டும் போதுமா?

தர்மம் செய்தால் மட்டும் போதுமா?

தர்மம் செய்தால் மட்டும் போதுமா?


PUBLISHED ON : ஆக 14, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 14, 2011


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பாத்திரமறிந்து பிச்சையிடு...' என்று ஒரு பழமொழி இருக்கிறதல்லவா? தானம் கொடுப்பது, பிச்சையிடுவது

என்பதெல்லாம் புண்ணியம் கிடைப்பதற்காக செய்வது. அதனால், நாம் கொடுக்கும் பணம், பொருள் எதுவானாலும், அது, எதற்கு பயன்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தானம், பிச்சையெல்லாம், சத் பாத்திரத்துக்கு கொடு என்றனர்.

யாராவது ஒருவர் வந்து, கும்பாபிஷேகத்துக்காக பணம் கேட்டால், அவர் யார், நிஜமாகவே கும்பாபிஷேகம் நடக்கப் போகிறதா என்பதை தெரிந்து கொடுக்கலாம். யாராவது, 'கள்ளுக்கடை திறக்கப் போகிறேன்; அதற்கு உதவி செய்யுங்கள்...' என்று கேட்டால், அதற்கு பணம் கொடுக்க வேண்டியதில்லை. நாம் கொடுக்கும் பணம், புண்ணிய காரியங்களுக்கு பயன்பட வேண்டும்; பாவ காரியங்களுக்கு பயன்பட்டு விடக்கூடாது.

ஒரு ஊரில், ஒரு பணக்காரன் இருந்தான். அவனிடம் வந்து பிச்சை கேட்டான் ஒரு பிச்சைக்காரன். அவனுக்கு, ஒரு ரூபாய் கொடுத்தான் பணக்காரன். அதை வாங்கிப் போய், ஒரு மீன் பிடிக்கும் தூண்டில் வாங்கி, மீன் பிடித்தான்

பிச்சைக்காரன். தூண்டில் மூலம் மீன் பிடித்து, விற்று கொஞ்சம் பணம் சேர்த்தான். பிறகு, அந்த பணத்தைக் கொண்டு, ஒரு மீன் பிடிக்கும் படகு வாங்கினான்.

படகில் போய் பெரிய மீன், சின்ன மீன் என்று நிறைய பிடித்து விற்றான்; அதன் மூலம் பணக்காரனாகி விட்டான்.

முக்கியமான தெருவில் ஒரு பெரிய மாடி வீட்டையும் வாங்கி, அதில் வசித்து வந்தான். இப்படியாக மீன் பிடி

படகுகளையும் நிறைய வாங்கி மீன் வியாபாரத்தில் முக்கிய புள்ளியானான்.

இவனுக்கு, ஒரு ரூபாய் பிச்சை போட்ட பணக்காரன், ஏழையாகி வந்தான். நாளடைவில், அவனது மாடி வீட்டையும் விற்க நேர்ந்தது. வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு, எல்லாமே போய் விட்டது. அவனே பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து விட்டான். தெரு, தெருவாக போய் பிச்சை எடுத்தான்.

ஒரு நாள், மீன் வியாபாரியின் வீட்டு வாசலில் நின்று பிச்சை கேட்டான். முன்பு ஒரு ரூபாய் பிச்சை வாங்கினவன் தான் இந்த மீன் வியாபாரி என்று தெரியாது. வாசலுக்கு வந்து பிச்சை கேட்டவனை பார்த்ததும் அடையாளம் தெரிந்து கொண்டான் மீன் வியாபாரி.

'ஐயா... நீங்கள் ஏன் இந்த நிலைக்கு வந்தீர்கள்?' என்று கேட்டான். அதற்கு, அவன், 'என்னவோ

நான் செய்த பாவம். இந்த கதிக்கு வந்து விட்டேன்...' என்றான். அதற்கு அந்த மீன் வியாபாரி, 'ஐயா... என்னை தெரிகிறதா... முன் ஒரு சமயம் நான் உங்கள் வீட்டு வாசலில் நின்று பிச்சை கேட்டேன். நீங்கள் ஒரு ரூபாய் தர்மம் செய்தீர்கள்... ஞாபகமிருக்கிறதா?' என்றான்.

ஞாபகப்படுத்தி, 'ஆமாம்... ஞாபகம் வருகிறது; ஆனால், நீ எப்படி இவ்வளவு பெரிய பணக்காரனாக முடிந்தது?' என்று கேட்டான். அதற்கு, நடந்த விஷயங்களை விவரித்தான். அப்போது தான், ஒரு ரூபாய் தர்மம் செய்ததின் தவறு அவருக்கு புரிந்தது. 'இந்த ஒரு ரூபாயைக் கொண்டு, எவ்வளவு மீன்களை பிடித்திருப்பான்; அவ்வளவு மீன்களை பிடித்து கொன்ற பாவம் அவனை சேராமல், என்னை சேர்ந்து விட்டது.

அதனால்தான் நான் இப்படி பிச்சைக்காரனாகி விட்டேன்... என்று மனம் நொந்தபடியே அடுத்த வீட்டுக்குப் போனான். நாம் செய்யும் தான, தர்மம் நல்ல காரியத்துக்கு பயன்படுகிறதா, பாவ காரியத்துக்கு பயன்படுகிறதா என்று கவனித்து கொடுக்க வேண்டும். அதனால்தான், 'பாத்திரமறிந்து பிச்சையிடு...' என்றனர்.

***

ஆன்மிக வினா - விடை

மந்திரங்களை, சுலோகங்களை எழுதுவது, உச்சரிப்பது - இரண்டில் எது அதிக பலன் அளிக்கும்?

மந்திரங்களை மனதால் உச்சரிக்க வேண்டும்; சுலோகங்களை வாய்விட்டு சொல்லலாம். இரண்டையும் மன ஒருமைப் பாட்டுடன் செய்தால், அதிக பலன்கள் கிட்டும்.

***

வைரம் ராஜகோபால்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us